News

Thursday, 17 December 2020 06:20 PM , by: KJ Staff

Credit : Daily Thandhi

போராடுவதற்கான அடிப்படை உரிமைகள் (Fundamental rights) அங்கீகரிக்கும்போது, போராட்டங்களால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிட கூடாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே (S.A. Popte) தெரிவித்துள்ளார்.

சமரச குழு:

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை உடனடியாக அகற்ற உத்தரவிடக் கோரியும், பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுக்களை (Welfare Petition) சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர சமரச குழு (Compromise Committee) அமைக்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

போராடும் உரிமை:

விவசாயிகள் நடத்தும் போராட்டம் பற்றி, 2-வது நாளாக விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், விவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது என்றும் இருப்பினும், போராடும் முறையை மாற்றி, பிற குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க (Protect) நினைக்கிறோம். போராடுவதற்கான அடிப்படை உரிமைகள் அங்கீகரிக்கும்போது, போராட்டங்களால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிட கூடாது என்று தெரிவித்தார்.

மேலும் வேளாண் சட்டங்களுக்கு (Agricultural Laws) எதிரான மனுக்கள் மீது தற்போதைக்கு முடிவெடுக்க போவதில்லை. விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பாக மட்டுமே விசாரணை நடத்தி இன்று முடிவு எடுக்கப்படும் என்றார்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

பயிர் பாதிப்பு குறித்து இரு நாட்களில் அரசிடம் அறிக்கை அளிக்கப்படும்! வேளாண் துறை தகவல்!

விவசாயிகளின் பிரச்னையை தீர்க்க தேசிய அளவில் குழு அமைக்க உச்சநீதிமன்றம் யோசனை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)