மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 April, 2022 12:36 PM IST
Cauvery Mother Statue at Hogenakkal Waterfalls..

ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் காவிரி தாய் சிலை?

சட்டப் பேரவையில் பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி கோரிக்கை.

தர்மபுரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான ஒகேனக்கல் தென்னிந்தியாவின் நயாகரா நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. பரிசல் ஓட்டுபவர்கள்மீன் வியாபாரிகள் மற்றும் எண்ணெய் மசாஜ் உட்படசுமார் 1000 குடும்பங்கள் இந்த சுற்றுலா தலத்தை தங்களுடைய வேலைக்காக நம்பியுள்ளனர்.

கூடுதலாகஒகேனக்கல் சுற்றுலா தளம் மாவட்டத்திற்கு குறிப்பிடத்தக்க வருவாயை உருவாக்குகிறது. இந்த சுற்றுலா தலத்தை மேம்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை நேற்று சட்டப்பேரவையில் நடைபெற்றது. கேள்வி நேரத்தின் போது பாமக தலைவரும்பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி பேசியதாவது:-

"வரலாற்றுச் சிறப்புமிக்க ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்திற்கு வெளி மாநிலங்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்த சுற்றுலாத் தலத்தை உலகத் தரம் வாய்ந்தவையாக மேம்படுத்திகாவிரிக் கோட்டம்காவிரி அருங்காட்சியகம் வேண்டும்மேலும் ஒகேனக்கல்லில் காவிரி தாய் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும்" என கோரிக்கை அறிவித்தார்.

இதற்குப் பதிலளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், “தமிழகத்தில் உள்ள 300 சுற்றுலாத் தலங்களில் ஒகேனக்கல் சுற்றுலாவும் ஒன்று. நிதி நிலைமைக்கு ஏற்ப முதலமைச்சருடன் கலந்தாலோசித்து வரும் ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மேலும் படிக்க..

ஒகேனக்கல் அருவி பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை!!

உயர்ந்து வரும் அணையின் நீர் மட்டம்: ஆர்ப்பரித்து கொட்டும் ஒகேனக்கல் அருவி

English Summary: Cauvery Mother Statue at Hogenakkal Waterfalls Need - Minister G.K. Mani Request
Published on: 27 April 2022, 12:36 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now