News

Thursday, 02 May 2019 03:58 PM

சி பி எஸ் இ  பொது தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டது. கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி  தேர்வு தொடங்கியது. இந்தியாவில் மொத்தம்  4,974 தேர்வு மையங்களிலும், வெளிநாடுகளில் 78 தேர்வு மையங்களிலும் இந்த பொதுத்தேர்வானது நடத்தப்பட்டது. மே 3 ஆம் வாரத்தில் முடிவுகள் வருமென கூறிய நிலையில் முதல் வாரத்திலே வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதிலுமிருந்து சுமார் 13 இலட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 7,48,498 மாணவர்கள்  5, 38,861 மாணவர்கள் எழுதி இருந்தனர். மேலும் இந்த தேர்வினை மூன்றாம் பாலினத்தவர் என பல பிரிவினரும் எழுதி இருந்தனர்.     

சி பி எஸ் இ  தேர்ச்சி விகிதம் இந்தாண்டு 83.4% ஆகும். முதல் இடத்தினை இரண்டு மாணவிகள் பகிர்ந்து கொண்டனர்.  உத்திர பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாணவிகள் 499 மதிப்பெண் எடுத்து இந்தியாவில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

மண்டல அளவில் திருவனந்தபுரம் முதலிடம் பெற்றுள்ளது. இங்கு தேர்ச்சி விகிதமானது 98.2 % ஆகும். அடுத்த இரண்டு இடத்தினை சென்னை மற்றும் புது டெல்லி பெற்றுள்ளது.

மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவினை  cbse.nic.in, cbseresults.nic.in  என்ற இணைய தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் .  

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)