வருடத்திற்கு 4000 குவிண்டால்- உருளை சாகுபடியில் அசத்தும் உ.பி. விவசாயி ! அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 28 August, 2023 10:44 AM IST
Center impose New restriction on export of basmati rice

உள்நாட்டு விலைகளை கட்டுப்படுத்தவும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாசுமதி அரிசிக்கும் ஏற்றுமதியில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பாசுமதி அல்லாத வெள்ளை அரிசியினை ஏற்றுமதி செய்ய கடந்த 20 ஜூலை 2023 அன்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து புழுங்கல் அரிசிக்கு 20 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நடப்பாண்டில் இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றுமதி அதிகமாக இருப்பது கவனிக்கத்தக்கது. ஆகஸ்ட் 17, 2023 வரை, அரிசியின் மொத்த ஏற்றுமதி (உடைந்த அரிசி தவிர, அதன் ஏற்றுமதி தடைசெய்யப்பட்டுள்ளது) முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 6.37 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது 7.33 மில்லியன் டன் ஆக இருந்தது, இது 15.06% அதிகரிப்பாகும்.

புழுங்கல்  அரிசி மற்றும் பாசுமதி அரிசி ஏற்றுமதி :

இந்த இரண்டு ரகங்களுக்கும் ஏற்றுமதிக்கு எந்த தடையும் இல்லை. புழுங்கல்  அரிசி ஏற்றுமதி 21.18% (முந்தைய ஆண்டில் 2.72 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண்டில் 3.29 மில்லியன் டன்), பாசுமதி அரிசி ஏற்றுமதி முந்தைய ஆண்டில் 1.70 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண்டில் 9.35% (1.86 மில்லியன் மெட்ரிக் டன்) அதிகரித்துள்ளது.

பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதி, 9 செப்டம்பர் 2022 முதல் 20% ஏற்றுமதி வரியைக் கொண்டிருந்தது.  20 ஜூலை 2023 முதல் தடைசெய்யப்பட்டுள்ளது, இது முந்தைய ஆண்டில் 1.89 மில்லியன் டன்களுடன் ஒப்பிடும்போது 4.36% (1.97 எம்எம்டி) அதிகரித்துள்ளது.

மறுபுறம், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறையின் மூன்றாவது மேம்பட்ட மதிப்பீட்டின்படி, 2022-23 ரபி பருவத்தில், உற்பத்தி 158.95 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே இருந்தது, இது 2021-22 ஆம் ஆண்டின் ரபி பருவத்தில் 184.71 லட்சம் மெட்ரிக் டன் ஆகும், அதாவது 13.84% வீழ்ச்சி(அரிசி உற்பத்தி).

புதிய கட்டுப்பாடு என்ன?

பாசுமதி அல்லாத வெள்ளை அரிசியின் தவறான வகைப்படுத்தல் மற்றும் சட்டவிரோத ஏற்றுமதி தொடர்பாக அரசாங்கத்திற்கு நம்பகமான கள அறிக்கைகள் கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து, ஒரு டன் பாஸ்மதி அரிசிக்கான ஏற்றுமதி விலை குறைந்தப்பட்சமாக 1200 டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே 1200 டாலருக்கு குறைவாக பாஸ்மதி அரிசியை இனி ஏற்றுமதி செய்ய முடியாது.

சர்வதேச விலையை விட இந்திய அரிசியின் விலை இன்னும் மலிவாக இருப்பதால், இந்திய அரிசிக்கு மற்ற நாடுகளில் அதிகப்படியான தேவை உள்ளது, இதன் விளைவாக 2021-22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டுகளில் ஏற்றுமதியில் புதிய உச்சத்தை அடைந்தது. தற்போது உள்ள சூழ்நிலையில், அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி வரியால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் காண்க:

WhatsApp-ல் வரும் spam மெசேஜ்- ரிப்போர்ட் செய்வது எப்படி?

மீண்டும் ஒரு சான்ஸ்.. மின் இணைப்பில் எளிதாக பெயர் மாற்ற!

English Summary: Center impose New restriction on export of basmati rice
Published on: 28 August 2023, 10:44 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now