News

Wednesday, 26 September 2018 10:02 PM

வேளாண் துறை வளர்ச்சிக்கு மானியத்துடன் முதலீடும் தேவை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். 

வேளாண்மைத் துறையின் மேம்பாட்டுக்கு மானியங்கள் மட்டும் போதாது; அத்துறையில் முதலீட்டையும் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் தன்னிறைவு பெற்று வாழ முடியும். முதலீட்டுக்கான வளங்களை முறையாகத் திரட்டுவதுதான், ஒரு சிறப்பான பொருளாதாரத்தை உருவாக்கும்.  

அப்போதுதான் நாம் வளர்ச்சியின் பயன்களை நேரடியாக உணர முடியும். இதற்கு, மூலதன உருவாக்கம் என்பது அரசின் கைகளில் மட்டுமல்லாது, பல்வேறு துறைகளிலும் பரவலாக நடைபெற வேண்டும். இந்தியாவில் வேளாண்மைத் துறைக்கு கூடுதல் முதலீடு தேவைப்படுகிறது. மானியம் வழங்குவதுடன் நின்றுவிடாமல், முதலீட்டையும் அதிகரிக்கும்போதுதான் வேளாண்துறை மேன்மையடையும். மானியத்தை மட்டுமே வழங்கிக் கொண்டிருப்பது ஏற்புடையதாக இருக்காது.  முதலீடுகள்தான் விவசாயிகள் தற்சார்புடன் இருப்பதை உறுதி செய்யும். விவசாயிகள் முழு பொருளாதார பலத்துடன் செயல்படும்போதுதான் இந்திய வேளாண் துறையும் சிறப்பான கட்டத்தை எட்டும்  என்றார் அவர்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)