News

Friday, 31 May 2019 01:04 PM

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலையில் காலியாக உள்ள  பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பயிற்சி பணியிடங்களுக்கு ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி விவரங்கள்

பணியிடம்: பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை

அமைப்பு: மத்திய அரசு

காலி பணியிடங்கள்: 992

கார்பெண்டர் - 80

எலக்ட்ரீசியன் - 200

பிட்டர் பிரிவில் - 260

மெஷினிஸ்ட் - 80

பெயிண்டர் - 80

வெல்டர் - 290

பி.ஏ.எஸ்.ஏ.ஏ. - 02

வயது வரம்பு: 01.10.2019 தேதியின்படி 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்,  மற்றும் சமீபத்தில் 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: உடல்திறன் தேர்வு மற்றும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.6.௨௦௧௯

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய, விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்,   https://icf.indianrailways.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.

 

K.SAKTHIPRIYA

KRISHI JAGRAN

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)