அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 29 August, 2023 4:27 PM IST
Central government approves to give relief of 200 rs on LPG cylinder price!

விலைவாசி ஏற்றத்தால் கவலையில் இருந்த மக்களுக்கு மத்திய அரசு பெரும் நிவாரணம் அளித்துள்ளது. அரசு வீட்டு சமையல் சிலிண்டருக்கு 200 ரூபாய் குறைத்து அறிவித்துள்ளது.

விலைவாசி ஏற்றத்தால் கவலையில் இருந்த மக்களுக்கு மத்திய அரசு பெரும் நிவாரணம் அளித்துள்ளது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரை (LPG விலையில்) 200 ரூபாய் வரை அரசு குறைத்துள்ளது. வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது குறிப்பிடதக்கது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் வரும் பயனாளிகளுக்கு, இந்த மானியம் வழங்கப்படும். ஆகஸ்ட் முதல் தேதி, பெட்ரோலிய நிறுவனங்கள் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் 100 ரூபாய் நிவாரணம் பெற்றனர். எனினும், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை.

தற்போதைய LPG விலை நிலவரம்!

ஆகஸ்ட் முதல் தேதி தலைநகர் டெல்லியில் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1103 ஆக இருந்தது. அதே நேரத்தில், எல்பிஜி சிலிண்டரின் விலை மும்பையில் ரூ.1102.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1129 ஆகவும், சென்னையில் ரூ.1118.50 ஆகவும் இருந்தது. பெட்ரோலிய நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி விலையை மாற்றுகின்றன என்பது குறிப்பிடதக்கது.

அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்:

அரசின் கூற்றுப்படி, உஜ்வாலா திட்டத்தின் கீழ் LPG சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைவாக இருக்கும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 

சுமார் 8 பிரிவுகளில், 153 மத்திய வேலைவாய்ப்பு: இதோ முழு விவரம்! Apply Now

உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளிகள் மட்டுமே சமையல் எரிவாயுக்கான மானியத்தின் பலனைப் பெறுவார்கள் என்று மத்திய அரசு கடந்த ஆண்டே தெளிவுபடுத்தியது. சமையல் எரிவாயு சிலிண்டர்களில் வேறு யாருக்கும் மானியம் வழங்கப்படாது. உஜ்வாலா திட்டத்தின் கீழ், அரசு ஏற்கனவே ரூ.200 மானியம் அளித்து வந்தது. இப்போது கூடுதலாக ரூ.200 நிவாரணத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

12 எல்பிஜி சிலிண்டர்களுக்கு மானியம்!

உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகள் ஒரு வருடத்தில் மொத்தம் 12 சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மானியம் பெறலாம். பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு (BPL) இலவசமாக LPG இணைப்புகளை அரசு வழங்குகிறது.

நிவாரணம் பெற, உங்கள் ஆதார் எண்ணை LPG இணைப்புடன் இணைக்க வேண்டும். மானியத்தைப் பெற, உங்கள் ஆதாரை எரிவாயு இணைப்புடன் இணைக்க வேண்டும். 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் கிடைக்கிறது. மார்ச் 2023 வரையிலான அரசு தரவுகளின்படி, உஜ்வாலா திட்டத்தின் கீழ் அரசு சுமார் 9 கோடிக்கும் அதிகமான இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை விநியோகித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

பெட்ரோலிய நிறுவனங்கள் 14.2 கிலோ உள்நாட்டு மற்றும் 19 கிலோ வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலையை ஒவ்வொரு மாதமும் முதல் தேதி நிர்ணயம் செய்கின்றன. நாட்டில் 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டரின் விலையில் கடைசியாக மார்ச் 1, 2023 அன்று மாற்றம் செய்யப்பட்டது.

மேலும் படிக்க:

செப்டம்பர் மாதத்தில் மட்டும் வங்கிக்கு இவ்வளவு நாட்கள் விடுமுறையா?

மீண்டும் ஒரு சான்ஸ்.. மின் இணைப்பில் எளிதாக பெயர் மாற்ற!

English Summary: Central government approves to give relief of 200 rs on LPG cylinder price!
Published on: 29 August 2023, 04:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now