மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 September, 2021 12:29 PM IST
Central Government Opportunity to Earn Rs 50,000

வீட்டில் அமர்ந்து பணம் ஈட்ட ஒரு மிகச்சிறந்த, பாதுகாப்பான வாய்ப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் 50 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடியும்.

மோடி அரசாங்கம் ஒரு சிறப்புப் போட்டியை துவங்கியுள்ளது. இதில் நீங்கள், வீட்டில் அமர்ந்தபடியே ஒரு லோகோ-வை(LOGO) டிசைன் செய்ய வேண்டும். உங்கள் வடிவமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டால், நீங்கள் 50 ஆயிரம் ரூபாய் பரிசு பெறலாம். இந்தப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெரும் வழியை இங்கே காணலாம்.

செப்டம்பர் 17 வரை விண்ணப்பிக்கலாம்(You can apply until September 17)

இந்த போட்டி பற்றிய தகவல்கள் MyGov இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. இதில் பங்குபெற, முதலில் நீங்கள் இந்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட லோகோ வடிவமைப்பு போட்டியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இந்த போட்டிக்கு விண்ணப்பிக்க, 2021 செப்டம்பர் 17, அதாவது இன்றே கடைசி நாளாகும். இந்தப் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரூ. 50,000 பரிசாக வழங்கப்படும்.

போட்டியில் பங்கேற்பது எப்படி?(How to participate in the competition?)

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஒருமனதாக இந்தியா வழங்கிய தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. அதன் கீழ் 2023 சர்வதேச தினை (Millets) ஆண்டாக அறிவிக்கப்பட்டது. 70 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த திட்டத்தை ஆதரித்தன. இதைக் கருத்தில் கொண்டு, இந்தப் போட்டியை விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் நடத்தி வருகிறது.

இந்த முக்கியமான தருணத்தைக் குறிக்கும் வகையில், 'சர்வதேச தினை ஆண்டு 2023' என்ற கருத்தில், இந்திய அரசு பொருத்தமான லோகோ மற்றும் ஸ்லோகன்/டேக்லைன்-ஐ வெளியிடும். இதற்காக கவர்ச்சிகரமான மற்றும் நேர்த்தியான லோகோ/டேக்லைனை உருவாக்க பொது மக்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது.

பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள கடினமான சூழ்நிலைகளில் தினை பயிர்களின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் வேளான் சாகுபடிக்கு அவற்றின் பயன்பாடு ஆகியவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே அரசின் நோக்கமாகும்.

யாருக்கு என்ன வெகுமதி கிடைக்கும்?(Who will get what reward?)

இதில், முதல் பரிசு பெறும் போட்டியாளருக்கு ரூ. 50,000 மற்றும் போட்டியில் வெற்றி பெற்றதற்கான மின் சான்றிதழ் அளிக்கப்படும். இதைத் தவிர இதில் பங்கேற்று நல்ல வடிவமைப்புகளை வழங்கும் மேலும் மூவருக்கும் பரிசுடன் அனைவருக்கும் மின் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

பதிவு செய்வது எப்படி?(How to register?)

  • இந்த போட்டியில் பங்கேற்க, நீங்கள் முதலில் myGov.in போர்ட்டலில் செல்ல வேண்டும்.
  • போட்டிக்குச் சென்று 'லாக் இன் டு பார்டிசிபேட்' என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • இதற்குப் பிறகு நீங்கள் பதிவு விவரங்களை இங்கே செலுத்த வேண்டும்.
  • பதிவுசெய்த பிறகு, போட்டிக்கான உங்கள் பதிவை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க:

இதை மட்டும் செய்யுங்க - ரூ.2 லட்சம் காப்பீடு இலவசமாகக் கிடைக்கும்!

ஒரு மணி நேரத்தில் ரூ.1 லட்சம் -பிஎஃப் கணக்கிலிருந்து எடுக்கலாம்!

English Summary: Central Government Opportunity to Earn Rs 50,000 from Home!
Published on: 17 September 2021, 12:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now