மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 February, 2023 1:44 PM IST
Pension, PF, LIC

பசுமை மின்சக்தி திட்டங்களில் LIC, EPFO நிறுவனங்களை முதலீடு செய்ய வைக்கவும், அரசின் பென்சன் நிதியை முதலீடு செய்யவும் இந்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பென்சன் நிதி முதலீடு

பவர் பைனான்ஸ் நிறுவனம் (PFC), REC, IREDA போன்ற மின்சார நிறுவனங்கள் விநியோகிக்கும் பத்திரங்களில் பென்சன் நிதியை முதலீடு செய்யவும், LIC மற்றும் EPFO நிறுவனங்களை முதலீடு செய்ய வைக்கவும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசிக்கும் (LIC), தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்துக்கும் (EPFO) நிர்வாகத்தில் பல லட்சம் கோடி ரூபாய் சொத்துகள் இருக்கின்றன. LIC மற்றும் EPFO நிறுவனங்களிடம் மொத்தமாக 50 லட்சம் கோடி ரூபாய் சொத்துகள் இருக்கின்றன.

2070ஆம் ஆண்டுக்குள் சுற்றுச்சூழல் இலக்குகளை எட்டுவதற்கு தேவையான முதலீட்டில் இன்னும் 3 லட்சம் கோடி டாலர் பற்றாக்குறை இருக்கிறது. இதை சமாளித்து முதலீடுகளை திரட்டுவதற்காக பென்சன் நிதியை முதலீடு செய்யவும், LIC மற்றும் EPFO நிறுவனங்களை பத்திரங்களில் முதலீடு செய்ய வைக்கவும் அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, LIC மற்றும் EPFO நிறுவனங்களின் சொத்துகளில் 1% மட்டும் பசுமை மின்சக்தி திட்டங்களுக்கான பத்திரங்களில் முதலீடு செய்ய வைக்க அரசு திட்டமிட்டு வருவதாக அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.

இந்த திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்தால், LIC மற்றும் EPFO நிறுவனங்களுக்கான முதலீட்டு கமிட்டிகளிலும் ஒப்புதல் கிடைக்க வேண்டும் என கூறப்படுகிறது. அதன் பிறகே மேற்கூறியபடி பசுமை மின்சக்தி திட்டங்களுக்கான பத்திரங்களில் LIC மற்றும் EPFO நிறுவனங்கள் முதலீடு செய்ய முடியும். தற்போது LIC மற்றும் EPFO நிறுவனங்களின் மொத்த சொத்து மதிப்பு 50 லட்சம் கோடி ரூபாய். டாலர் அடிப்படையில் இந்த சொத்துகளின் மதிப்பு 604.87 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

ரெப்போ வட்டி உயர்வு: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: வருகிறது உத்தரவாத பென்சன் திட்டம்!

English Summary: Central government plan to invest Pension, LIC, PF money in this!
Published on: 09 February 2023, 01:44 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now