News

Thursday, 25 August 2022 05:57 PM , by: T. Vigneshwaran

Export Of Wheat Flour

பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று கூடி ஆலோசித்து இந்த முடிவை எடுத்தது.

இதன்படி, கோதுமைஏற்றுமதி கொள்கையில் திருத்தம் கொண்டு வரவும், கோதுமை மற்றும் மெஸ்லின் மாவு ஏற்றுமதியில் விதிவிலக்குகளை நீக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் , வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்துக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், கோதுமை மாவு விலை உயர்வு, உணவுப் பொருட்கள் விலை உயர்வு, உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

ரஷ்யா உக்ரைன் போரால் பல்வேறு நாடுகளுக்கு கோதுமையை இந்தியா ஏற்றுமதி செய்தது. இதனால் உள்நாட்டில் கோதுமை பற்றாக்குறை வந்துவிடக்கூடாது என்பதாலும், உள்நாட்டில் கோதுமை விலை உயர்ந்ததாலும் கோதுமை ஏற்றுமதிக்கு தம்திய அரசு தடை விதித்தது. அதுமட்டுமல்லாமல் நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதி்க்கப்பட்டதால், சர்வதேச சந்தையில் கோதுமை மாவுக்கான தேவை அதிகரித்தது. இதனால் கோதுமை மாவு ஏற்றுமதி ஏப்ரல் முதல் ஜூலை வரை 200 சதவீதம் அதிகரித்தது. கோதுமை மாவு ஏற்றுமதியால் உள்நாட்டு சந்தையில் கோதுமை மாவு விலை உயர்ந்தது. இதையடுத்து கோதுமை மாவு ஏற்றுமதிக்கும் மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

மேலும் படிக்க:

தனி ஒருவனாக 1,500 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் விவசாயி

தமிழகம் முழுவதும் வலம் வரும் வேலுநாச்சியார் நாட்டிய நாடகம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)