சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 12 April, 2021 7:19 AM IST
Central government urges farmers to give up struggle
Credit : SMEstreet

விவசாயிகள் தங்கள் பேராட்டத்தைக் கைவிட்டால், பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தொடரும் போராட்டம் (The struggle to continue)

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மேற்கொண்டு வரும் இந்தப் போராட்டம் சுமார் 5 மாதங்களை எட்டியுள்ளது.

பேச்சுவார்த்தை தோல்வி (Negotiation failed)

அதேவேளையில், விவசாயச் சங்கங்களுடன், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் நடைபெற்ற பலகட்டப் பேச்சுவார்த்தைகளில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. இதனால் போராட்டம் தொடர்கிறது.

மிரட்டும் கொரோனா (Intimidating corona)

இதுஒருபுறம் இருக்க, தற்போது, நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதுவரை இந்தியாவில் லட்சக்கணக்கானோர், கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்தியஅரசு அழைப்பு (Union Government Call)

பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு, போராட்டத்தைக் கைவிட்டுப் பேச்சுவார்த்தைக்கு முன்வருமாறு விவசாயிகளுக்கு அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்துள்ளார்.

அல்லது போராட்டத்தை ஒத்திவைத்துவிட்டுப் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள். இதற்கு விவசாயிகள் ஒப்புக்கொண்டால், பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயார் எனவும் தோமர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

ஊட்டியில் கேரட் விலை குறைந்தது! கவலையில் விவசாயிகள்!

உரங்களின் விலை உயர்வு நிறுத்தி வைப்பு! பழைய விலைக்கே வாங்கி கொள்ளலாம்!

உரங்கள் விலை உயர்வால் விவசாயிகள் வேதனை! விலைவுயர்வைக் குறைக்க கோரிக்கை!

English Summary: Central government urges farmers to give up struggle
Published on: 12 April 2021, 06:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now