News

Saturday, 16 October 2021 11:48 AM , by: T. Vigneshwaran

Pm Shram Yojana in Tamil nadu

நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால் இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வெறும் 2 ரூபாயைச் சேமிப்பதன் மூலம் 36,000 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். உண்மையில், மத்திய அரசு (Centrral Government) அமைப்புசாரா துறையுடன் தொடர்புடைய தொழிலாளர்கள் போன்றவர்களுக்காக ஒரு சிறப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அது தான் பிரதான் மந்திரி ஷ்ராம் யோகி மந்தன் யோஜனா (Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana).

இந்தத் திட்டம் தெரு விற்பனையாளர்கள், ரிக்ஷாக்காரர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா துறையுடன் தொடர்புடைய வேறு பல வேலைகளில் ஈடுபடுவோருக்கானது. இந்தத் திட்டத்தின் கீழ், அரசாங்கம் உங்களுக்கு ஓய்வூதியத்திற்கான உத்தரவாதத்தை அளிக்கிறது. இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு ரூ.2 சேமிப்பதன் மூலம், நீங்கள் ஆண்டுக்கு ரூ.36,000 ஓய்வூதியம் பெறலாம்.

மாதம் 55 ரூபாய் மட்டும்- Only 55 rupees per month

18 வயதிலிருந்தே இந்த திட்டத்தை யாராவது தொடங்கினால், அவர் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அதாவது, ஒரு நாளைக்கு ரூ. 2 சேமித்து, மாதத்திற்கு ரூ.55 சேமிப்பதன் மூலம் நீங்கள் ஆண்டுக்கு ரூ.36000 ஓய்வூதியம் பெறலாம். அதே நேரத்தில், இந்த திட்டத்தை 40 வயதிலிருந்து தொடங்கும் நபர் ஒவ்வொரு மாதமும் ரூ.200 டெபாசிட் செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் 60 வயதிற்குப் பிறகு ஓய்வூதியம் பெறத் தொடங்குவீர்கள். 60 ஆண்டுகளுக்குப் பிறகு, நீங்கள் மாதத்திற்கு ரூ.3000 அதாவது ஆண்டுக்கு ரூ.36000 ஓய்வூதியம் பெறுவீர்கள்.

தேவையான ஆவணங்கள்-Required Documents

விண்ணப்பிக்கும் நபர் சேமிப்பு வங்கி கணக்கு மற்றும் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும். நபரின் வயது 18 வயதுக்கு குறையாமலும், 40 ஆண்டுகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். பதிவு செய்ய, தொழிலாளிக்கு ஆதார் அட்டை(Adhar card) , சேமிப்பு அல்லது ஜன் தன் வங்கி கணக்கு பாஸ்புக்(saving accounts), மொபைல் எண்(Mobile number) தேவை. இது தவிர, ஒப்புதல் கடிதம் கொடுக்கப்பட வேண்டும், அது தொழிலாளிக்கு வங்கி கணக்கு இருக்கும் வங்கி கிளையில் கொடுக்கப்பட சமர்ப்பிக்க வேண்டும், அப்போதுதான் ஓய்வூதியத்திற்காக அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்படும்.

எப்படி பதிவு செய்வது-How to register

இந்தத் திட்டத்திற்காக தொழிலாளர்கள் பொது சேவை மையத்தில் (CSC) பதிவு செய்ய வேண்டும். இத்திட்டத்திற்காக மத்திய அரசு ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளது. தொழிலாளர்கள் CSC மையத்தில் உள்ள போர்ட்டலில் பதிவு செய்ய முடியும். இந்த மையங்கள் மூலம் ஆன்லைனில் உள்ள அனைத்து தகவல்களும் இந்திய அரசுக்கு நேரடியாக செல்லும்.

கட்டணமில்லா தொலைபேசி எண்-Toll free phone number

இந்தத் திட்டத்திற்காக, தொழிலாளர் துறை அலுவலகம், எல்ஐசி(LIC), இபிஎஃப்ஒ(EPFO) ஆகியவை ஷ்ராமிக் வசதி மையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த அலுவலகங்களைப் பார்வையிடுவதன் மூலம், தொழிலாளர்கள் திட்டம் பற்றிய தகவல்களை எளிதில் பெறலாம். இத்திட்டத்திற்கான கட்டணமில்லா தொலைபேசி எண் 18002676888 ஐ அரசு வெளியிட்டுள்ளது. திட்டம் பற்றிய தகவல்களையும் இந்த எண்ணிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க:

Post Office Saving Scheme: மாதம் ரூ.1500 மட்டுமே செலுத்தி ரூ.31 லட்சம் பெறலாம் !

Post Office Scheme : ரூ.100 முதலீடு செய்து 5 ஆண்டுகளில் ரூ. 20 லட்சம்!

அரசின் இலவச ஆட்டுக் கொட்டகைத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)