சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 17 February, 2021 8:11 AM IST

விவசாயிகள் தங்கள் வருவாய் மற்றும் உற்பத்தித் திறனைப் பெருக்கிக்கொள்ள சான்று அளிக்கப்பட்ட சணல் விதைகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி வேண்டுகோள விடுத்துள்ளார்.

விதைகள் விநியோகத் திட்டம் (Seed distribution scheme)

ஒடிசா மாநிலத்தின் பாரக்பூரில் உள்ள ஐசிஏஆர்-சிஆர்ஜேஏஎஃப் (ICARC-CRJAF) சார்பில் சான்றளிக்கப்பட்ட சணல் விதைகள் விநியோக திட்டம் மற்றும் சணல் விவசாயிகளுக்கான விழிப்புணர்வுப் பட்டறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்துப் பேசினார்.

விதை உற்பத்தி அதிகரிப்பு (Increase in seed production)

அப்போது, வெறும் 60 மெட்ரிக் டன் சான்றளிக்கப்பட்ட சணல் விதைகள் மற்றும் 20,000 விவசாயிகளோடு 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐகேர் முன்னெடுப்பு, வெறும் ஒன்றரை வருடங்களில் வேகமாக முன்னேறி 2017ம் ஆண்டு 600 மெட்ரிக் டன் சான்றளிக்கப்பட்ட சணல் விதைகளாக உயர்ந்தது.

2.6 லட்சம் விவசாயிகள் (2.6 lakh Farmers)

இந்தத் திட்டத்தின் கீழ் 2.60 லட்சம் விவசாயிகளுக்கு அரசு, இதுவரை ஆதரவு அளித்துள்ளது. மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், சணல் ஐகேர் முன்னெடுப்பை சரியான முறையில் கொண்டுசென்றதுடன், நேர்மையான முயற்சிகளும், சிறப்பான ஒருங்கிணைப்பும் எதிர்பார்த்த பலன்களை அளித்திருக்கிறது.

5 லட்சம் விவசாயிகள் (5 lakh Farmers)

10,000 குவிண்டால் சான்றளிக்கப்பட்ட சணல் விதைகள் விநியோகிக்கப்படுவதன் மூலம், சுமார் 5 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். சணல் புவி சார்ந்த ஜவுளி உள்ளிட்ட தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் கீழ் சணல் புவி சார்ந்த ஜவுளியை ஊக்குவிக்கும் வகையில், சணல் புவி சார்ந்த ஜவுளிக்கான தர நிலைகளுக்கு இந்திய தர நிலை அலுவலகம் ஒப்புதல் அளித்திருக்கிறது.

இவ்வாறு ஸ்மிருதி இராணி கூறினார்.

மேலும் படிக்க...

வங்கிகளை விட அதிக லாபம் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்! - சின்ன சேமிப்பு அதிக லாபம்!

உரச்செலவை குறைத்து விளைச்சலை அதிகரிக்க உதவும் பசுந்தாள் உரத்தின் பயன்கள்!

மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்க புதிய செயலி அறிமுகம்!

English Summary: Certified Jute Seeds - Call for Farmers!
Published on: 17 February 2021, 08:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now