News

Saturday, 03 August 2019 11:17 AM

வடக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதிகளின் காற்று வீசும் திசை மாறி இருந்த காரணத்தால் கடந்த ஒரு வாரமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை குறைந்திருந்தது.

மேலும் இன்னும் ஓரிரு தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததை அடுத்து, மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதியில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவி வருகிறது.

இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் சென்னை, புதுச்சேரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், விழுப்புரம், ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய நிலவரம் படி சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் மட்டும் அதிக பட்ச மழையாக 1 செ.மீ  மழை பதிவாகியுள்ளது, மற்றும் இதர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்று தெரிவித்தார்.

https://tamil.krishijagran.com/news/dry-weather-likely-for-another-two-days-in-tamil-nadu-pondicherry/

K.Sakthipriya
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)