மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 10 October, 2020 4:41 PM IST
Credit: One india

வங்கக்கடலில் வலுப்பெற்று வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், 4 மாவட்டங்களில் மிக கன மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று அழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலைக்கொண்டுள்ளது.
இதன் காரணமாக, தெற்கு அந்திர கடலோரப்பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவை அநேக இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு இரு இடங்களில் மிக கன மழையும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் கடல் பகுதியில் வருகிற 14ம் தேதி உருவாகக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நேற்று அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று அழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலைக்கொண்டுள்ளது.

மழைபொழிவு

கடந்த 24 மணிநேரதில் வேப்பூர் (கடலூர்)13 செமீ, ஒகேனக்கல் (தர்மபுரி)மதுரை சவுத் தலா 8 செமி, சேத்தியாத்தோப்பு, ராசிபுரம் பகுதிகளில் தலா 7 செமீ, மேலூர், சிவகங்கை, நிலக்கோட்டை, தல்லாகுளம், சோழவந்தான், சூலகிரி, வீரகனூர், ஆகிய பகுதிகளில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

அக் 10 - 14 வரை குமரிக் கடல் மற்றும் வளைகுடா பகுதிகளில், மணிக்கு 45 -55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

அக் 10-14 வரை அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

அக் 11, 12 ஆகிய தேதிகளில் மத்திய மேற்கு வங்க கடல் பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில், மணிக்கு 50-60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

அக் 10ம் தேதி மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில், மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்

எனவே, மீனவர்கள் யாரும் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் படிக்க...

இந்தியாவில் முதல் முறையாக கேரள மாநிலத்தில் விவசாயிகள் நல நிதி வாரியம் அமைப்பு!

பி.எம் கிசான் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 42,000 கிடைக்கும்

தரமான விதைகள் மூலம் அதிக மகசூல் பெறலாம் - விவசாயிகளுக்கு விதை பரிசோதனை அலுவலர் அறிவுரை

 

English Summary: Chances of Moderate to very heavy rainfall all over Tamil Nadu in the next 24 hours says Imd Chennai
Published on: 10 October 2020, 04:41 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now