News

Tuesday, 01 November 2022 12:51 PM , by: R. Balakrishnan

மாநிலம் முழுவதும், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசின் நிதித்துறை அதிரடியாக வெளியிட்டுள்ளது. தற்போது இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.

Government employees retirement age

ஓய்வு பெறும் வயது (Retirement Age)

தமிழகத்தில் கடந்த ஆட்சியின் போது, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது. ஊழியர்களுக்கான பென்ஷன் நிலுவை தொகை உள்ளிட்டவைகளை வழங்க தாமதம் ஆவதால், அடுத்த இரண்டு வருடத்திற்கு அரசு ஊழியர்களின் பதவி காலம் நீட்டிக்கப்படுவதாக அரசு விளக்கம் அளித்தது.

இந்த நிலையில், இது குறித்து அதிரடி அறிவிப்பு ஒன்றை கேரளா அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், சில நிறுவனங்கள் இதை மாற்றி அமைத்திருந்தது.

பல்வேறு கமிட்டி மற்றும் குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக நிர்ணயிக்கப்படுவதாக மாநில நிதித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க

பழைய பென்சன் திட்டத்தில் புதிய பிரச்சனை: அச்சத்தில் அரசு ஊழியர்கள்!

PF பயனர்கள் கவனத்திற்கு: பென்சன் தொடர்பான விதிமுறைகள் இதோ!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)