News

Saturday, 02 July 2022 04:15 AM , by: R. Balakrishnan

Charges for underground water

நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கு, பணம் வசூல் செய்யப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தஞ்சையில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், தண்ணீரை தனியாருக்கு, விற்பனை செய்வதற்காக மத்திய அரசு தண்ணீர் கொள்கை 2012 என்கிற அரசாணை பிறப்பித்தது.

நிலத்தடி நீர் (Ground Water)

இதற்கு எதிர்த்து தொடர்ந்து போராடி வந்த நிலையில், வீட்டுக்கு பயன்படுத்தும் ஆழ்குழாய் கிணறுகளுக்கு, மத்திய அரசின் ஜல்சக்தி துறைக்கு 3 மாதத்திற்குள்ளாக தலா ரூ. 10 ஆயிரம் செலுத்த வேண்டும். பணத்தை செலுத்தி தான் நிலத்தடி நீரைக் குடிநீருக்காக பயன்படுத்துகிறேன் என்பதை பதிவு செய்ய வேண்டும் என விளம்பரப்படுத்தி இருக்கிறது. இது வன்மையாக கண்டிக்க கூடியது. இந்த நடவடிக்கை என்பது குடியரசுக்கு எதிரானது. இது தனிமனித உரிமையை பறிக்கும் செயலாகும்.

இது குறித்து தமிழக அரசு வாய்மூடி மௌனமாக இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கான போராட்டத்தை தீவிர படுத்துவோம். தமிழக அரசு இதை மூடி மறைக்க முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது. தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என பிஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

மேலும் படிக்க

உரத்தட்டுப்பாட்டை சமாளிக்க என்ன செய்ய வேண்டும்?

அத்திப்பழம் சாகுபடி: முன்னோடி விவசாயியின் அனுபவம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)