News

Wednesday, 14 December 2022 02:43 PM , by: R. Balakrishnan

Thenpennai River

ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரை பெருக்கெடுத்து இருப்பதால் அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடக மாநில எல்லையில் உள்ள ஓசூரில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தென்பெண்ணை ஆற்றில் இரசாயனம்

கெலவரப்பள்ளி அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் தற்போது 40 அடிக்கு மேல் இருப்பு உள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 1060 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்நிலையில், திடீரென தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரை பெருக்கெடுத்து துர்நாற்றத்துடன் செல்வதால் பரபரப்பு நிலவுகிறது. ரசாயன நுரை பெருக்கெடுத்து இருப்பதால் அதிர்ச்சி அடைந்துள்ள விவசாயிகள் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் தண்ணீரில் அம்மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலக்கப்பட்டு இருக்கலாம் என்றும் ஐயம் தெரிவிக்கின்றன.

விவசாயிகள் கோரிக்கை

தொடர்ந்து 2 வாரங்களாக தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரை பெருக்கெடுத்த நிலையில் அரசு அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ஓசூர் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க

PM கிசான் 13வது தவணை எப்போது? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

கரும்பு விவசாயத்தில் கால்தடம் பதித்த போர் விமான தயாரிப்பு பொறியாளர்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)