News

Thursday, 11 April 2019 11:40 AM

சென்னைக்கென்று பல புராதன அடையாளங்கள் உண்டு. பெரும்பாலான கட்டிடங்கள் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டு  இன்றும் தலை நிமிர்த்து நிற்கிறது. தென்னக இரயில்வேயின் தலைமை இடமாகவும் திகழ்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க சென்னை சென்ட்ரல் நிலையத்தின் பெயர்  தற்போது "புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்" என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான வேண்டுகோளை தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் பிரதமரிடம் வைத்தார். வேண்டுகோளை ஏற்று மத்திய உள்துறை  அமைச்கசகத்துடன் கலந்தாலோசித்து ஒப்புதல் அளித்தது.

மக்கள் கருத்து

சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து தினமும் நுற்றுக்கணக்கான்  இரயில்களும், லட்சக்கணக்கான மக்களும் பயணிக்கிறார்கள்.அவர்களில்  வெகு சிலரே இந்த பெயர் மாற்றத்தை வரவேற்கின்றனர். பெரும்பாலான மக்கள் இந்த  மாற்றத்தை  ஏற்கவில்லை. எம்.ஜி.ஆர் அவர்களின் பெருமையை பறைசாற்ற பலவழிகள் உள்ளன.ஆனால் இந்த பெயர் மாற்றம் மற்ற மாநிலத்தவருக்கும், வெளிநாட்டவருக்கும்  உச்சரிக்கம் போது சற்று கடினமாக உள்ளது என்கின்றனர். எனவே ,தமிழக அரசு மக்களின் மன ஓட்டத்தை கருத்தில் கொண்டு பெயர் பலகை மற்றும் பணியினை தொடர வேண்டும்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)