மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 August, 2019 10:23 AM IST

வளிமண்டல காற்று சுழற்சி காரணமாக வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் மேற்கு பருவ மழையின் தீவிரம் காரணமாக தமிழகம் , கேரளா, கர்நாடக மற்றும் வட மாநிலங்களில் கனமழை பெய்து அணைகள் மற்றும் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன.

கேரளாவில் பெய்த பலத்த மழையால் கோவை, நீலகிரி, நெல்லை, தேனீ, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றன மற்றும்  அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன.

மேலும் வட கிழக்கு மற்றும் மேற்கு  பகுதிகளில்  ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாகை, திருவாருர், கிருஷ்ணகிரி ஆகிய 12  மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் மற்றும் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய கூடும்.

நேற்றைய நிலவரம் படி அதிக மழை பொழிவாக வேலூர் மாவட்டத்தில் 17 செ.மீ மழையும், வேலூர் அருகே உள்ள ஆலங்காயத்தில் 15 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து பெய்யும் மழையால்  அணைகளின் நீர் மட்டம் உயர்ந்தும், நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்து வருவதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.       

https://tamil.krishijagran.com/news/again-heavy-rains-started-in-western-ghats-next-2-days-heavy-rainfall-likely-to-be-occurs-in-tamil-nadu/

K.Sakthipriya
Krishi Jagran

English Summary: Chennai Meteorological Department! heavy Rain's for Next 2 Days in Tamil Nadu: Dams & Water Levels were filled with continuous Rainfall
Published on: 19 August 2019, 10:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now