மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 July, 2020 2:54 PM IST

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கோவை நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்குக் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சிக்கு காரணமாக வட கடலோர மாவட்டங்கள், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நீலகிரி, கோவை, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் 

கனமழைக்கு வாய்ப்பு 

கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கூடும் என்று என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை பொழிவு

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லார், வால்பாறையில் தலா 9 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. சின்கோனாவில் 8 செ.மீ, வால்பறை வட்டாச்சியர் அலுவலகத்தில் 7 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

  • இன்று அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்

  • இன்றும் நாளையும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 -50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்

  • இன்று முதல் வரும் ஆகஸ்டு 1ம் தேதி வரை கடலோர கேரளா, கர்நாடகா, லட்சதீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 -50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்

  • ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை மகராஷ்டிரா கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 -50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்

  • இன்று முதல் வரும் ஆகஸ்டு 3ம் தேதி வரை தென் மேற்கு, மத்திய மேற்கு மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 -60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்

இதனால் மீனவர்கள் யாரும் இப்பகுதிக்கு மீன்படிக்க செல்லவேண்டாம் என்று வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது. 

மேலும் படிக்க..

தமிழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து?

இந்திய எல்லையில் நுழையக் காத்திருக்கும் (வெட்டுக்கிளி) எதிரிகள் - மத்திய அரசு எச்சரிக்கை!

English Summary: Chennai Meteorological Department warns of heavy rains in 11 districts today
Published on: 30 July 2020, 07:16 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now