சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 29 August, 2019 11:03 AM IST

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால் மிதமான சூழல் நிலவுகிறது. வெப்பச்சலனம் காரணமாக இன்றும் நாளையும் மழை நீடிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

தென்மேற்கு பருவ காற்றின் சாதகப்போக்கு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீண்டும் மழை பெய்வது அதிகரித்துள்ளதால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.  

சென்னையில் நேற்று காலை நேரம் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் வானம் கும்மிருட்டாக மாறி மழை கொட்டியது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், எழும்பூர், திருவல்லிக்கேணி, வடபழனி, போரூர், வளசரவாக்கம், பூவிருந்தவல்லி, அம்பத்தூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு பரவலாக மழை பெய்தது, இதனால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, திருத்தணி, ஆர்.கே பேட்டை, கனகமாச்சித்திரம் உள்ளிட்ட இடங்களில் மாலையில் கனத்த மழை பெய்தது.   

மேலும் வெப்பச்சலனம் காரணமாக இன்றும் நாளையும் மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழைக்கான வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்ஸியஸ், குறைந்த பட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்ஸியஸ் பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரம் படி நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 5 செ.மீ மழையும், கோவை சின்னக்கல்லாறு பகுதியில் 3 செ.மீ மழையும், வால்பாறை தாலுகா  அலுவலகம் பகுதியில் 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

https://tamil.krishijagran.com/news/latest-weather-updates-chennai-meteorological-department-forecast-heavy-rain-for-the-next-two-days/

K.Sakthipriya
Krishi Jagran 

English Summary: Chennai Weather update! Tamil Nadu and puducherry seems to receive convective rainfall for Next 24 hours
Published on: 29 August 2019, 11:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now