News

Monday, 15 March 2021 05:47 PM , by: KJ Staff

Credit : Dinakaran

எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் 7-வது முறையாக போட்டியிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy), எடப்பாடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். எடப்பாடி தொகுதியில் இதுவரை 6 முறை போட்டியிட்டு 4 முறை எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். 1989-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக எடப்பாடி தொகுதியில் போட்டியி்ட்டார்.

  • மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் (Udayakumar) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் அதிமுக (ADMK) சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ வேட்பு மனு தாக்கல் செய்தார்.
  • விழுப்புரம் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளரும் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் வேட்புமனு தாக்கல் (Nomination) செய்தார்.
  • தருமபுரி – பாலக்கோடு தொகுதியில் போட்டியிடும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

திமுகவினர் வேட்பு மனு தாக்கல்

  • சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (MK Stalin), அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் உள்ள பழைய மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி எம்.தங்கவேலுவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
  • காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் துரைமுருகன் தனது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்.
  • பண்ருட்டி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்

பாஜகவினர் வேட்பு மனு தாக்கல்

  • கோவை மாவட்டத்தில் உள்ள தெற்கு தொகுதியில் பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவர் திருமதி வானதி சீனிவாசன் கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அமமுகவினர் வேட்பு மனு தாக்கல்

  • கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சங்கர நாராயணனிடம், அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மக்கள் நீதி மய்யம்

  • கோவை தெற்கில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நாம் தமிழர் கட்சி

  • திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பு மனு தாக்கல் (Nomination) செய்துள்ளார்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

முதல் நாளே போடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ஓபிஎஸ்!

ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விவசாயிகள்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)