மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 January, 2021 7:42 PM IST
Credit : Daily Thandhi

தொடர் மழையிலும் தாக்குப்பிடிக்கும் வகையில் புதிய நெல் ரகங்களை கண்டுபிடிக்குமாறு கலெக்டர் அர்ஜூன்சர்மா (Arjun Sharma) வலியுறுத்தினார். காரைக்காலை அடுத்த செருமாவிலங்கை கிராமத்தில் பண்டித ஜவகர்லால் நேரு அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் (பஜன்கோவா) செயல்பட்டு வருகிறது. இங்கு 4 ஆண்டு கால விவசாய இளங்கலை வேளாண் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு, பாடத்திட்டத்தின் ஓர் அங்கமாக, நேரடி களப்பயிற்சி (Direct field training) அளிக்கப்பட்டு வருகிறது.

வேளாண் கண்காட்சி:

கொரோனா (Corona) தொற்று காரணமாக, காரைக்காலில் 23 மாணவ, மாணவிகளும், மற்ற பகுதிகளில் 98 மாணவர்களும் அந்தந்த பகுதியில் களபயிற்சி மேற்கொண்டனர். அப்போது விவசாயிகளிடம் கண்டுபிடித்த, பாரம்பரிய தொழில்நுட்பங்களின் ஒரு நாள் வேளாண் கண்காட்சி (Agricultural Exhibition) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கண்காட்சிக்கு கல்லூரி முதல்வர் ஷமராவ் ஜஹாகிரிதர் தலைமை தாங்கினார். வேளாண் பொருளியல் மற்றும் விரிவியல் துறை தலைவர் புஷ்பராஜ் முன்னிலை வகித்தார். பேராசிரியர் ஆனந்தகுமார் அறிமுக உரையாற்றினார். கண்காட்சியை கலெக்டர் அர்ஜூன்சர்மா தொடங்கி வைத்தார்.

புதிய வகை நெல் ரகம்

சமீபகாலமாக தொடர் மழையால் நீரில் மூழ்கி நெற்பயிர்கள் (Paddy crops) அழுகி வருகின்றன. இதுபோல் விவசாயிகளின் உழைப்பு வீணாவதை ஏற்க முடியவில்லை. மழை, வெள்ளத்தினால் நெற்பயிர்கள் வயலில் சாயாமல், தாக்குப்பிடிக்கும் வகையில் புதியவகை நெல் ரகங்களை (New varieties of paddy) கண்டறிய மாணவர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் முன்வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார்.

காப்புரிமை

விவசாயிகளின் பாரம்பரிய தொழில் நுட்பங்களை ஆவணமாக்கி, காப்புரிமை (Patent) போன்ற ஆதாய உரிமைகளை பெறலாம். கடந்த 4 மாதமாக களபயிற்சி மேற்கொண்டு, தங்கள் அனுபவங்களையும், விவசாயிகளின் உழைப்பையும் கண்காட்சியாக்கிய, பேராசிரியர், மாணவர்களை மனதார பாராட்டுகிறேன்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

இயற்கை விவசாயத்தை கடைபிடிக்க வேண்டுகோள் விடுக்கும் இயற்கை விவசாயி!

மானாவாரிப் பயிர் நிவாரணத்துக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்! வருவாய்த்துறை தகவல்!

English Summary: Collector urges to find new varieties of paddy that can withstand continuous rains!
Published on: 24 January 2021, 07:42 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now