மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 8 October, 2021 10:00 AM IST
Credit : Wikipedia

இடஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று பொறியியல் கல்லூரிகளுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த ஆண்டு முதல் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இதன் பொறியியல் கல்லூரிகளில் பல மாணவ - மாணவிகள் சேர்ந்துள்ளனர்

புகார்கள் (Complaints)

அவ்வாறு பொறியியல் கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கட்டணம் முழுவதையும் தமிழக அரசு ஏற்பதாக அறிவித்து இருந்தது. ஆனால் ஒரு சில பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

எச்சரிக்கை (Warning)

இந்த புகாரை அடுத்து அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கல்வி கட்டணம் உள்பட எந்த வகை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும், மீறிக் கட்டணம் வசூலிக்கும் பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் லட்சுமி பிரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பிச் செலுத்த வேண்டும்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:


அரசுப் பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் ஏஐசிடிஇ மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். ஏதேனும் கட்டணம் இதற்கு முன்னர் வசூலித்து இருந்தால் மாணவர்களிடம் அதை உடனே திருப்பிச் செலுத்த வேண்டும்.


இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏஐசிடிஇயின் இந்த எச்சரிக்கை கல்லூரி நிர்வாகத்தினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க...

குறுவை நெல் கொள்முதல் பணிகள்- விரைவாக முடிக்க முதலமைச்சர் உத்தரவு!

தப்பு செஞ்சா இனி கை,கால் கட்- அதிர்ச்சியில் மக்கள்!

English Summary: College license revoked if fees are charged - Warning to engineering colleges!
Published on: 08 October 2021, 08:10 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now