மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 May, 2022 5:19 PM IST
Complains that the Amma Restaurant operates at a high price like a hotel...

தமிழ்நாட்டின் முதல்வராக ஜெயலலிதா இருந்த காலத்தில் 2012-ம் ஆண்டில் குறைந்த விலைக்கு உணவு விற்பனை செய்யும் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. முதலில் சென்னையில் திறக்கப்பட்ட அம்மா உணவகம் பிறகு மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. ஏழை மக்கள் பலரும் அம்மா உணவகத்தில் தொடர்ந்து உணவு உண்டு தங்கள் பசியைப் போக்கிவருகின்றனர். இந்தநிலையில், கடந்த ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு அம்மா உணவகம் செயல்படுமா என்று கேள்வி எழுந்த நிலையில் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என்று அரசு அறிவித்தது.

இருப்பினும், அம்மா உணவகங்கள் முன்புபோல முறையாக செயல்படவில்லை என்று புகார்கள் எழுந்துவருகின்றன. அதேபோல, மதுரையில் உள்ள பல அம்மா உணவகங்களில் ஏற்கனவே பணிபுரிந்த பெண் பணியாளர்கள் பணி நீக்கம் செய்துவிட்டு திமுக ஆதரவுடைய பணியாளர்கள் நியமிக்கப்பட்டதாகவும், இதனை சாதகமாக பயன்படுத்தி திமுக கவுன்சிலர்கள் சிலர் அவரவர் பகுதிகளில் உள்ள அம்மா உணவகத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாகவும் கடந்த காலங்களில் சர்ச்சைகள் எழுந்தன.

இந்நிலையில், மதுரை புதூர் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் மாநகராட்சி அனுமதித்துள்ள 1 ரூபாய்க்கு விற்கப்படும் இட்லி மற்றும் 5 ரூபாய்க்கு விற்கப்படும் பொங்கலுக்கு பதிலாக பூரி, வடை, உப்புமா, சப்பாத்தி, ஆம்லேட் என தனியார் உணவகத்தில் கிடைப்பது போன்று பல்வேறு வகையான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல் மதிய வேளைகளிலும் சாதத்துடன் ரசம், மோர், ஆம்லேட் உள்ளிட்டவை விற்கப்பட்டு வருகிறது.

ஏழை எளியோரின் பசி போக்க செயல்பட்ட அம்மா உணவகத்தை திமுக கவுன்சிலர்கள் சிலர் தங்களுக்கு லாபம் ஈட்டும் உணவகமாக மாற்றியுள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில் அது குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் படிக்க:

சென்னையில் 3 நடமாடும் அம்மா உணவகங்கள்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்!

English Summary: Complains that the Amma Restaurant operates at a high price like a hotel.
Published on: 23 May 2022, 05:19 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now