நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 April, 2024 4:57 PM IST
Congress manifesto

இந்தியாவில் தேர்தல் களம் சூடுப்பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய கட்சியான காங்கிரஸ் வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதியை இன்று டெல்லியில் நடைப்பெற்ற நிகழ்வில் அறிவித்தது. சமூக நலன் சார்ந்து பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதும் நிலையில், விவசாயம் தொடர்பாக சில முக்கிய வாக்குறுதிகளையும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள ஆழமான நெருக்கடிக்கு விவசாயிகளின் போராட்டம் எச்சரிக்கை மணி அடிக்கிறது என காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நிலையில், என்ன மாதிரியான வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்துள்ளது என காணலாம்.

MSP-க்கு சட்டப்பூர்வ உத்தரவாதம்:

  • எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைத்தபடி, ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கம் அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) சட்டப்பூர்வ உத்தரவாதத்தை காங்கிரஸ் அளிக்கும்.
  • விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான கமிஷன் (CACP) ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக மாற்றப்படும்.
  • கொள்முதல் நிலையங்கள் மற்றும் APMC-களில் விவசாயி-விற்பனையாளருக்கு செலுத்த வேண்டிய MSP தொகையானது நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டிஜிட்டல் முறையில் வரவு வைக்கப்படும்.
  • விவசாயக் கடன் அளவு மற்றும் பேரிடர் நெருக்கடியில் கடனின் தேவை குறித்து அவ்வப்போது அறிக்கை அளிக்கும் விவசாய நிதிக்கான நிரந்தர ஆணையத்தை நியமிப்போம்.

பயிர்க் காப்பீடு முறையில் மாற்றம்:

  • பயிர்க் காப்பீடு முறையில் விவசாய பண்ணை மற்றும் விவசாயிக்குக் குறிப்பிட்டதாக மாற்றப்படும். காப்பீட்டுத் தொகைக்கு ஏற்ப விவசாயிகளிடமிருந்து பிரீமியம் வசூலிக்கப்படும் மற்றும் அனைத்து கோரிக்கைகளும் 30 நாட்களுக்குள் தீர்க்கப்படும்.
  • விவசாயிகள் அமைப்புகளுடன் கலந்தாலோசித்து, விவசாயப் பொருட்களை விற்பனை செய்வதற்கான மூன்று வழிகளை விவசாயிகளுக்கு வழங்குவோம்:
  • (அ) நடைமுறையில் உள்ள APMC சட்டத்தின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை.
  • (ஆ) விவசாயிகள் அமைப்புகள், உழவர்-உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOக்கள்) மற்றும் தனிப்பட்ட முற்போக்கான விவசாயிகளின் பிரதிநிதித்துவத்துடன் தன்னாட்சி அமைப்பு மூலம் இயக்கப்படும் மின் சந்தை.
  • (இ) விவசாய விளைபொருட்களை பண்ணை வாயிலிலோ அல்லது விருப்பமான வேறு எந்த இடத்திலோ விற்க விவசாயிக்கு சுதந்திரம், விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தத்தை டிஜிட்டல் லெட்ஜரில் பதிவேற்றம் செய்யலாம்.

Read also:  கொஞ்சம் மருந்து தெளிச்சாலும் பிரச்சினை தான்- மிளகாய் ஏற்றுமதியில் அசத்தும் இயற்கை விவசாயி

விளைப்பொருட்களுக்கான ஏற்றுமதி கொள்கை:

  • விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கொண்டு வந்து நுகர்வோருக்கு விற்பனை செய்ய பெரிய கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் விவசாயிகளின் சில்லறை விற்பனை சந்தைகளை நிறுவுவோம்.
  • விவசாயிகளின் நலன்கள் மற்றும் கவலைகளைப் பாதுகாப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் விவசாயப் பொருட்களுக்கான சிறந்த இறக்குமதி-ஏற்றுமதிக் கொள்கையை காங்கிரஸ் உருவாக்கி செயல்படுத்தும்.

வேளாண் அறிவியல் மையம் அதிகரிப்பு:

  • ஒவ்வொரு விவசாய நிலத்திற்கும் சிறந்த அறிவு மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரப்புவதற்கு வேளாண்மை விரிவாக்கச் சேவைகளின் அமைப்பைப் புதுப்பிக்கவுள்ளோம். கிருஷி விக்யான் கேந்திராக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, ஒவ்வொரு கேந்திரத்திற்கும் அதிகமான விஞ்ஞானிகளை நியமிப்போம்.
  • குழாய் கிணறுகளுடன் இணைக்கப்பட்ட சோலார் பேனல்களை நிறுவுவதற்கான ஒரு பெரிய திட்டத்தை நாங்கள் தொடங்குவோம்.
  • தோட்டக்கலை, மீன் வளர்ப்பு மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஒரு பெரிய முயற்சியை காங்கிரஸ் செயல்படுத்தும். மேலும் விவசாயிகளை இந்த நடவடிக்கைகளில் பன்முகப்படுத்தவும் அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் ஊக்குவிக்கும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும்- ஒரு வேளாண் கல்லூரி:

  • பால் மற்றும் கோழி வளர்ப்பு உற்பத்தியின் மதிப்பை ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாக்குவோம்.
  • மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து, நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு வேளாண் கல்லூரி மற்றும் ஒரு கால்நடை மருத்துவக் கல்லூரி நிறுவப்படுவதை உறுதி செய்வோம்.
  • விவசாயத்தில் R&D-க்கான நிதியை ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாக்குவோம்.

விவசாயிகளின் பிரச்சினைக்கு பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் பதில் இரக்கமற்றதாகவும், மிருகத்தனமாகவும் இருக்கிறது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நியாயமான மற்றும் லாபகரமான விலை கிடைப்பதில்லை; உற்பத்தியாளர்கள் தங்கள் விளைபொருட்களை சந்தைப்படுத்த போதுமான வழிகள் இல்லை என தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது காங்கிரஸ். விவசாயம் தொடர்பான வாக்குறுதிகள், தேர்தல் களத்தில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணிக்கு கைக்கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Read more:

ஒரு நபர் 79 கிலோவா? உணவுக்கழிவு குறித்து அதிர்ச்சி ரிப்போர்ட்!

விவசாய பயன்பாட்டுகான டிராக்டர்- ஏற்றுமதியில் வளர்ச்சி கண்ட மஹிந்திரா

English Summary: Congress manifesto to attract farmers Particularly Change in crop insurance system
Published on: 05 April 2024, 04:57 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now