மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 8 August, 2019 11:24 AM IST

தமிழகம் முழுவது கடந்த சில தினங்களாக லேசான சாரல் மழை பெய்து வருகிறது. காற்று வீசும் திசை மாறிக் கொண்டே இருப்பதால் தென்மேற்குப் பருவமழை மேலும் தீவிரமடைந்த வருகிறது. மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்குள் சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு பிறகு மேலும் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை,  காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற  இடங்களில் வழக்கத்தைவிட விட அதிக மழை பெய்யும்  வானிலை ஆய்வாளர் கூறியுள்ளார்.  காற்றின்  திசையானது தென்மேற்கு திசையிலிருந்து  வடகிழக்கு  திசை நோக்கி நகர்ந்து செல்ல இருக்கிறது. எனவே சென்னை, புதுவை  உள்ளிட்ட கடலோர பகுதிகளுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம் மற்றும் கேரளா எல்லையோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு விடும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  அவிலஞ்சியில் ஒரே நாளில் 82 செ.மீ மழை பெய்துள்ளது.

இதுவரை சராசரி மழையான 206.8 மி.மீ அளவை விட, 22% அதிகம் பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக  400 மி.மீ வரையிலான மழை பொலிவு பெய்ய இருப்பதால் மழை நீர் சேகரிப்பு உபகரணங்களைத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Continuous Rain In Tamil Nadu And Pondycherry : Heavy Rain Will be coming soon, Check Out Where? And When
Published on: 08 August 2019, 11:24 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now