மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 January, 2022 11:19 AM IST

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு விதிகளை மதிக்காமல் அத்துமீறியவர்களிடம இருந்து ரூ.3.45 கோடியை போலீஸார் அபராதமாக வசூலித்துள்ளனர்.

கொடூரக் கொரோனா (Cruel corona)

உலகெங்கிலும் நோய்த்தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் ஒவ்வொரு அரசும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் குறைந்து இருந்த நோய் பரவல் தற்போது அதிகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவற்றை விதித்துள்ளது.

அரசின் இந்தக் கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவோர் மீது காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவில் அத்துமீறி செயல்பட்டவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை ஆணையர் கூறியதாவது:- மாநிலம் முழுவதும் காவல்துறையினரால் ஜனவரி 2வது வாரத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிகளை மீறியதற்காக 3.45 கோடி ருபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதம் (Penalty)

முக கவசம் அணியாமல் இருந்ததால் 1 லட்சத்து 64 ஆயிரத்து 329 நபர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 1910 நபர்கள், 1552 இடங்களில் தேவையின்றி கூடுதல் போன்ற விதிமீறல்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வழக்குகள் (Cases)

இதுத்தவிர, 254 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 96 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னை மாநகரில் முக கவசம் அணியாதவர், மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறியதற்காக 43 ஆயிரத்து 417 நபர்களிடமிருந்து 86 லட்சம் ரூபாய் அபராதம் பெறப்பட்டுள்ளது.

போலீஸார் வேண்டுகோள் (Police request)

வடக்கு மண்டலத்தில் 40 ஆயிரத்து 148 நபர்களிடமிருந்து 83 லட்சம் ரூபாய் அபராதம் பெறப்பட்டுள்ளது. எனவே அபராதம் செலுத்துவதைத் தவிர்க்க ஏதுவாகப், பொதுமக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பொது இடங்களுக்கு முகக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதம், அண்மையில் ரூ.200ல் இருந்து ரூ500 ஆக அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

கொரோனா வைரஸைத் தடுக்க மக்களின் பங்களிப்பு அவசியம்!

3ம் அலையை தடுக்க 3 முக்கிய காரணிகள்: மத்திய ஆலோசனை குழு!

English Summary: Controversial people collect Rs 3.44 crore in fines
Published on: 16 January 2022, 10:33 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now