News

Saturday, 20 August 2022 10:42 AM , by: R. Balakrishnan

Gas cylinder

பண்டிகை சீசனால் சமையல் காஸ் சிலிண்டருக்கு தேவை அதிகரித்துள்ளதால், ஞாயிற்றுக்கிழமைகளிலும் 'டெலிவரி' செய்யுமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு, வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஸ் சிலிண்டர் (Gas Cylinder)

பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழகத்தில், 2.38 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். சிலிண்டர் வேண்டி பதிவு செய்த இரண்டு, மூன்று நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், சிலிண்டர் டெலிவரி செய்யப்படுவதில்லை. நேற்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, விஜயதசமி, ஆயுதபூஜை, தீபாவளி என, ஹிந்து பண்டிகைகள் வர உள்ளன. இதனால், வீடுகளில் சமையல் காஸ் பயன்பாடு அதிகம் இருக்கும்.

மேலும், பண்டிகை நாட்களில் சிலிண்டர் டெலிவரியும் செய்வதில்லை. எனவே, ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிலிண்டர் டெலிவரி செய்யுமாறு, எண்ணெய் நிறுவனங்களுக்கு, வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க

நவீன வசதிகளுடன் வந்தே பாரத் ரயில்: பயணிகளுக்கு குட் நியூஸ்!

அட இதுக்கெல்லாம் போட்டியா? ஜப்பானில் விநோதம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)