News

Sunday, 05 June 2022 11:04 AM , by: R. Balakrishnan

Corbevax Vaccine

கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை, 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் பூஸ்டர் டோசாக செலுத்திக்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் பயாலஜிக்கல்-இ நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளது.

கோர்பேவாக்ஸ் தடுப்பூசி (Corbevax Vaccine)

கோர்பேவாக்ஸ் தடுப்பூசி 5 முதல் 14 வயது வரையிலானோருக்கு செலுத்தப்படுகிறது. இந்த நிலையில், கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களும், பூஸ்டர் டோசாக செலுத்திக்கொள்ள டிசிஜிஐ எனப்படும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தி 6 மாதங்கள் கடந்தவர்கள் பூஸ்டர் டோசாக கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தற்போது உயர்ந்து வரும் நிலையில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியமாகிறது. முகக் கவசத்தை முறையாக அணிய வேண்டும். தனிமனித விலகலை கடைபிடிப்பதும், கொரோனா வைரஸை விரட்ட உதவும்.

மேலும் படிக்க

கலர் அப்பளம் சாப்பிட்டால் புற்றுநோய் உண்டாக வாய்ப்பு: ஆய்வில் அதிர்ச்சி!

4 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு: பொதுமக்கள் அதிர்ச்சி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)