மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 March, 2021 1:05 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு கால்நடை ஆராய்ச்சி கல்லூரியில் 19 மாணவர்கள் உட்பட 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கொரோனா 2வது அலை

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கு முதன்முதலாக் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் கொரோனா தொற்று குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு பள்ளி கல்லூரிகளின் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து பள்ளி கல்லூரிளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இணைய வழியில் வகுப்புகள் எடுக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.

கால்நடை கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று

தஞ்சை மாவட்டத்தில் 13 பள்ளிகள், 4 கல்லூரிகளில் பயின்ற மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் என 190 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இதுவரை 110 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் ஒரத்தநாட்டில் உள்ள அரசு கால்நடை ஆராய்ச்சி கல்லூரியில் கடந்த 23-ம் தேதி 430 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்த கல்லூரி மாணவர்கள் 19 பேர் மற்றும் 1 விடுதி பெண் உதவியாளர் என 20 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து 20 பேரும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

இதேபோல் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து, பள்ளி கல்லூரிகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கர்நாடகா, மகாராஷ்டிரா, கேராளா மாநிலத்திலும் கொரொனோ தொற்று தமிழகத்தை விட அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிடிக்க...

தடுப்பூசிகளின் பயன்பாட்டால் 2022-க்குள் உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பலாம் - பில்கேட்ஸ் கருத்து!!

18 மாநிலங்களில் மரபணு மாறிய புதிய வகை கொரோனா - கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!

English Summary: Corona 2nd wave in Tamilnadu affects 19 Veterinary Research College students in Thanjai
Published on: 26 March 2021, 01:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now