நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 March, 2022 7:15 AM IST
Corona 4th wave in June

கொரோனா 4வது அலை ஜூன் 22ல் தொடங்கி, ஆகஸ்ட் இறுதியில் உச்சத்தை எட்டும் என்று கான்பூர் ஐஐடி ஆராய்ச்சி மாணவர்களின் மாதிரி ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் பரவல் குறித்து புள்ளியியல் அடிப்படையில், கான்பூர் ஐஐடி.யின் கணிதம், புள்ளியியல் துறை மாணவர்கள், கடந்த 4 மாதங்களாக நடத்திய மாதிரி ஆய்வு மேற்கொண்டனர். அந்த மாதிரி ஆய்வறிக்கையில் கொரோனா நான்காம் அலையின் காலத்தைக் கணித்துள்ளனர்.

நான்காம் அலை (4th Wave)

கொரோனா தொற்று இந்தியாவில் ஜனவரி 30, 2020ம் ஆண்டில் இருந்து பரவத் தொடங்கியது. அந்த கணக்கின்படி, 936 நாட்களுக்கு பிறகு, இந்தியாவில் அதன் 4வது அலை பரவத் தொடங்கும். எனவே, கொரோனா 4வது அலை ஏறக்குறைய ஜூன் 22ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மத்தியில் அல்லது இறுதியில் ஆகஸ்ட் 23ம் தேதி உச்சத்தை எட்டி, அக்டோபர் 24ம் தேதி குறையத் தொடங்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 4வது அலையில், ஏற்கனவே போடப்பட்டிருக்கும் 2 தடுப்பூசிகள், பூஸ்டர் டோஸ் ஆகியவை நோயின் தீவிரத்தை குறைப்பதில் முக்கிய பங்காற்றும் காரணிகளாக விளங்கும்.

கொரோனாவில் தொடங்கி ஒமிக்ரானாக உருமாறிய வரையில் தொற்று கடந்த வந்த பாதையை கணித்தே இந்த மாதிரி புள்ளியியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 4ம் அலை தொடங்கும் கால கட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

தொற்று குறைந்தது (Infection Reduced)

நேற்று காலை 8 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்துக்கான கொரோனா பலி, பாதிப்பு குறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:

  • புதிய தொற்று பாதிப்பு கடந்த 2 மாதங்களுக்கு பிறகு 10,000க்கு கீழ், 8,013 ஆக பதிவானது. இது கடந்தாண்டு டிசம்பர் 28ம் தேதி 9,195 ஆக இருந்தது.
  • நேற்று ஒரே நாளில் 115 பேர் பலியானதால், மொத்த உயிரிழப்பு 5,13,843 ஆக உள்ளது.
  • சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,02,601 ஆக உள்ளது.
  • நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்து கொண்டவர்களின் எண்ணிக்கை 177.50 கோடியை கடந்துள்ளது.

மேலும் படிக்க

உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கியதால் இந்தியாவை பாராட்டிய பில் கேட்ஸ்!

கொரோனா வைரஸக் கட்டுப்படுத்த தாவரத்தில் இருந்து தடுப்பூசி!

English Summary: Corona 4th wave in June: information in the study!
Published on: 01 March 2022, 07:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now