மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 January, 2022 8:36 AM IST
Credit: Dailythanthi

தமிழகத்தில் ஒரே நாளில் 23,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டு உள்ளது. 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா 3-வது அலை (Corona 3rd wave)

கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் 3 வது அலையாகப் படுவேகமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. பரவலைக் கட்டுப்படுத்த ஏதுவாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு உள்ளிட்டப் பல்வேறுக் கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு படுவேகமாகப் பரவி வருகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

23,459 பேர்

தமிழகத்தில் 1,53,046 மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா வைரஸ் பரவல் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 23,438 பேர், வங்கதேசத்திற்கு சென்று திரும்பிவர்கள் 9 பேர், உக்ரைன், ஐக்கிய அரபு எமிரேட் சென்று திரும்பியவர்கள் தலா ஒருவர் மற்றும் மேற்குவங்கம், கர்நாடகம், உ.பி., தலா 2 பேர் பீஹார், சிக்கிம், திரிபுரா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவர் என மொத்தம் 23,459 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,91,959 ஆக அதிகரித்து உள்ளது. 9,026 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,36,986 ஆக உயர்ந்துள்ளது.

26 பேர் பலி

26 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,956 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


சென்னை (Chennai)

சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 13ம் தேதி 8,218 ஆக இருந்த நிலையில் 14 ம் தேதி 8963 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க...

கொரோனா வைரஸைத் தடுக்க மக்களின் பங்களிப்பு அவசியம்!

3ம் அலையை தடுக்க 3 முக்கிய காரணிகள்: மத்திய ஆலோசனை குழு!

English Summary: Corona Daily Impact 23,459-
Published on: 14 January 2022, 09:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now