News

Sunday, 13 February 2022 09:06 AM , by: R. Balakrishnan

Corona greatly decreases

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல், ஏறிய வேகத்தில் இறங்குகிறது என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழகம் முழுதும், 22வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் நடந்த முகாமை, அமைச்சர் சுப்பிரமணியன், செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

குறையும் கொரோனா (Decreasing corona)

அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது: வரும் சனிக்கிழமை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெறுவதால், 23வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது. 'ஒமைக்ரான்' பாதிப்பு எந்த அளவுக்கு வேகமாக உயர்ந்ததோ, அதே வேகத்தில் இறங்குகிறது. அந்த வகையில், இதோடு ஒமைக்ரான் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். விரைவில், அடுத்த பணிகளில் கவனம் செலுத்துவோம் என்று அவர் கூறினார்.

புதிய வைரஸ் (New Virus)

கொரோனா வைரஸ் பற்றி நிறைய தெரிந்துகொண்டுள்ளோம். ஆனால் எல்லாமே நமக்கு தெரியாது. மேலும் வெளிப்படையாக சொன்னால் இந்த வைரஸ் உருமாற்றங்கள் வைல்டு கார்டு போல திடீரென்று தோன்றலாம். எனவே நாங்கள் நிகழ்நேரத்தில் அதைக் கண்காணிக்கிறோம். இது மாறும்போது, உருமாற்றம் நேருகிறது. அது மேலும் உருமாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

ஒமைக்ரான் வைரஸ் கவலைக்குரிய மாறுபாடு. இது கடைசி உருமாற்றமாக இருக்காது. அடுத்தது உங்களுக்கு தெரியும். அது பரவ சிறிது காலம் அவகாசம் எடுக்கும். நாம் மற்ற வகை உருமாற்ற வைரஸ்களைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் உண்மையிலேயே அதிகமாக உள்ளது.

மேலும் படிக்க

மூக்கு வழியாக தடுப்பு மருந்து: ஆராய்ச்சியில் ஆய்வாளர்கள்!

WHO எச்சரிக்கை: புதிய வகை கொரோனா உருவாக வாய்ப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)