மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 August, 2021 7:14 PM IST
Corona Infection

கொரோனா தொற்று சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சற்று கடினமாக உள்ளது. திருமண நிகழ்வு உள்ளிட்ட ஒரு சில மதம் சார்ந்த நிகழ்வு நடப்பது சுகாதாரத்துறைக்கு சவாலாக இருக்கிறது, என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மருத்துவக் கல்லூரிகள் (Medical Colleges) இன்று திறக்கப்பட்டதால் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பின் அவர் நிருபர்களிடம் பேட்டியளித்தார்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள்

மருத்துவ கல்லூரிகளுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) போட்டு இருக்க வேண்டும். இல்லையென்றால் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும். கல்லூரியில் மாணவர்களுக்கு முகக்கவசம் (Mask) வழங்கச் சொல்லி இருக்கிறோம். வளாகங்களில் தனி மனித இடைவெளி (Social Distance) அவசியம் பின்பற்றப்பட வேண்டும்.

கொரோனா தொற்று சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சற்று கடினமாக உள்ளது. திருமண நிகழ்வு உள்ளிட்ட ஒரு சில மதம் சார்ந்த நிகழ்வு நடப்பது சுகாதாரத்துறைக்கு சவாலாக இருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து பணி புரிவதால் முதுகுத் தண்டு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு!

கையிருப்பில் 12 லட்சம் தடுப்பூசி

கொரோனா தொற்று குறைந்துள்ள மாவட்டத்தில் முழுமையாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் தவணை தடுப்பூசி (Second Dose Vaccine) செலுத்த மக்கள் கவனம் செலுத்த வேண்டும். இன்னொரு அலைக்காக மக்கள் காத்திருக்காமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி தட்டுப்பாடு அவ்வப்போது இருக்கிறது. தற்போதைய நிலையில் 12 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. தமிழகத்தில் இன்னும் 6 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டி இருக்கிறது. பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

மேலும் படிக்க

கொரோனா தடுப்பூசி: 48 கோடி டோஸ் செலுத்தி இந்தியா புதிய சாதனை!

தடுப்பூசியை கலந்து போடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு!

English Summary: Corona infection is a challenge for the health sector!
Published on: 16 August 2021, 07:14 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now