மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 April, 2022 8:17 AM IST
Corona infection test at railway stations again

இரயில் நிலையங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோரால் ஏற்படும் கொரோனா தொற்று பாதிப்பை தவிர்க்க சென்னை, திருச்சி, சேலம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட, 50 ரயில்வே ஸ்டேஷன்களில் கொரோனா பரிசோதனை ஒன்றரை ஆண்டாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. பெரும்பாலான மாவட்டங்களில் பாதிப்பு பூஜ்யத்துக்கு வந்ததால், பரிசோதனை நிறுத்தப்பட்டது.

பரிசோதனை (Testing)

வட மாநிலங்களில் கொரோனா மெல்ல அதிகரித்து வருவதால், அங்கிருந்து ரயிலில் தமிழகம் வருவோரை, மீண்டும் ரயில் நிலையத்தில் வைத்து, பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை ஆலோசித்துள்ளது. முதல் கட்டமாக, வடமாநிலத்தினர் அதிகமாக வந்திறங்கும் ரயில்வே ஸ்டேஷன்களில் மட்டும், பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் சென்னை ஐ.ஐ.டி.,யில் 30 பேருக்கு தொற்று உறுதியானது.
13 மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் இவ்விடுதியில் உள்ளனர். தொற்று பரவல் வேகமெடுத்து வரும் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு மாணவரால் பிறருக்கு தொற்று பரவியுள்ளது.

இதனால் தான், முதல்கட்டமாக வடமாநிலங்களில் இருந்து ரயிலில் தமிழகம் வந்திறங்குவோரை பரிசோதிக்க, பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: பூஸ்டர் டோஸ் அவசியம்!

கொரோனா சிகிச்சைக்கு இன்டோமெதசின் மருந்து: சென்னை ஐ.ஐ.டி. ஆய்வில் கண்டுபிடிப்பு!

English Summary: Corona infection test at railway stations again!
Published on: 26 April 2022, 08:17 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now