News

Thursday, 23 June 2022 09:43 PM , by: Elavarse Sivakumar

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3 வயது வரை உள்ள குழந்தைகள் சுமார் 2 மாதம் கொரோனா அறிகுறியை அனுபவித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொரோனாவின் அடுத்தடுத்த அலைகள் தொடர்ந்து உருவாகிக்கொண்டே இருக்கின்றன. தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், தொற்றின் வீரியம் குறையத் தொடங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.

இம்சிக்கும் கொரோனா

அதே நேரம் கொரோனா உருமாறி புதிய வகைகளில் பரவி கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தொற்றின் அறிகுறிகள் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக 'லேன்செட் சைல்டு அன்ட் அடோல்ஸ்சென்ட் ஹெல்த்' இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வு டென்மார்க்கில் உள்ள குழந்தைகளிடம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதாவது நீண்ட கால அறிகுறிகள் குழந்தைகளிடையே தொற்று இருப்பதை குறிப்பதாகவும், இது போன்ற பிரச்சினைகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியத்தை எழுப்புவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அறிகுறி

மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைத்து வயதினருக்கும் 2 மாதங்கள் அல்லது அதற்கு மேலாக குறைந்தபட்சம் ஒரு அறிகுறி காணப்படுவது ஆய்வில் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்ட 3 வயது வரை உள்ள குழந்தைகளில் 40 சதவீதம் பேர் 2 மாதங்களுக்கு மேலாக அறிகுறிகளை தென்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது சுமார் 2 மாதங்கள் பாதிப்பு நீடித்திருக்கிறது. 4 முதல் 11 வயதுக்குட்பட்டவர்களில் 38 சதவீதம் பேரும், 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களில் 41 சதவீதம் பேரும் நீண்ட கால அறிகுறியை அனுபவித்துள்ளனர்.

மேலும் படிக்க...

கவனக் குறைவு வேண்டாம் - ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!

ஒரு நாளைக்கு எத்தனை டீ குடிக்கலாம்?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)