மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 July, 2021 7:18 PM IST
Credit : Dinamalar

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், கொரோனா வைரஸ் (Corona Virus) பாதிப்பை தவிர்க்க முடியாது என, உலக சுகாதார நிறுவன தலைவர், டெட்ராஸ் அதனோம் எச்சரித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டி

தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த, ஜப்பான் தலைநகர், டோக்கியோவில், ஆக.,8ல் ஒலிம்பிக் போட்டி (Olympic Games) துவங்குகிறது. இதையொட்டி, உலக நாடுகளின் விளையாட்டு வீரர்கள், டோக்கியோவிற்கு வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில்,சர்வதேச ஒலிம்பிக் குழுவின் கூட்டத்தில், டெட்ராஸ் அதனோம் பேசியதாவது: கொரோனா பாதிப்பு புள்ளி விபரத்தின் மூலம், ஒலிம்பிக் போட்டியில் வைரஸ் பாதிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. வைரஸ் பிரச்னையை முற்றிலும் ஒழிப்பதென்பது முடியாத காரியம்.

இந்த பிரச்னைக்கு இடையிலும் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. 'ரிஸ்க்' எடுக்காமல் வாழ்க்கை இல்லை. ஒலிம்பிக் போட்டியின் வெற்றி என்பது, ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வதில் அடங்கியுள்ளது. இதற்கு, பல கட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். விளையாட்டு வீரர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை விரைவாக அடையாளம் கண்டு, தனிமைப்படுத்த வேண்டும். இதன்மூலம் நோய் பரவலை கட்டுப்படுத்தலாம்.

தடுப்பூசி

உலகில் வழங்கப்பட்ட தடுப்பூசியில் (Vaccine), 75 சதவீதத்தை 10 நாடுகள் மட்டுமே பங்கு போட்டுக் கொண்டுள்ளன. இது, அநியாயம். உலகில் தாங்கள் வசிக்கும் பகுதியில் வைரஸ் ஒழிந்து விட்டதாக கருதுவோர், முட்டாள்களின் சொர்க்கத்தில் வசிக்கின்றனர் என்றுதான் கூற வேண்டும் என்று அவர் பேசினார்.

மேலும் படிக்க

40 கோடி பேருக்கு கொரோனா ஆபத்து: ICMR ஆய்வில் தகவல்!

போராட்ட களத்தை மாற்றினர் விவசாயிகள்: ஜந்தர் மந்தரில் தீவிர போலீஸ் பாதுகாப்பு!

English Summary: Corona outbreak in Olympics: WHO warning!
Published on: 22 July 2021, 07:18 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now