மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 May, 2021 9:32 PM IST

தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 34,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் இந்தியாளவில் தொடர்ந்து 6-வது நாளாகப் பாதிப்பு குறைந்து வருகிறது.

35 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34,875 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இருப்பினும் 365 பேர் உயிரிழந்து உள்ளனர். 23,863 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 70,355 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 34,875பேருக்கு கொரோனா உறுதியானது. அதில், 8 பேர், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், 33,867பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,99,225 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,56,04,311 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. 

365 பேர் கொரோனா பாதிப்பால் மரணம்

365 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 178 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 187 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18,734 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இந்தியளவில் இன்று 6-வது நாளாக கொரோனா தொற்று பாதிப்பு 3 லட்சத்துக்குக் கீழ் பாதிப்பு குறைந்து உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒரு நாளில் நாட்டில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 334 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகினர். இதன் மூலம் நாட்டில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 54 லட்சத்து 96 ஆயிரத்து 330 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் 4,529 பேர் மரணம்

அதேவேலையில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இது வரை இல்லாத வகையில் 4,529 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 83 ஆயிரத்து 248 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் புதிதாகத் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 13 சதவீதம் குறைந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க...

ஊரடங்கு மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்படலாம்- தளர்வுகளுக்கு வாய்ப்பு இல்லை!

English Summary: Corona to reach peak in Tamil Nadu, 6th day of low impact in India !!
Published on: 19 May 2021, 09:32 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now