மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 June, 2021 11:54 AM IST
Credit : Dinamalar

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் அனைவரும் தடுப்பூசி (Vaccine) செலுத்திக் கொள்ள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு, நோய் எதிர்ப்பு திறன் (Immunity) அதிகரிப்பதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆய்வு:

அமெரிக்காவின் ராக்பெல்லர் பல்கலையின் ஆய்வாளர்கள், கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பிற்கு உள்ளான, 63 பேரை, தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்த ஆய்விற்கு உட்படுத்தினர். பரிசோதனைக்கு உள்ளானவர்களில், குறைந்தபட்சம் ஒரு, 'டோஸ்' பைசர் அல்லது மாடர்னா தடுப்பூசி செலுத்திக் கொண்ட, 26 பேரின் உடலில் ஏற்பட்ட மாறுபாடுகளின் அடிப்படையில் சில விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு

இவர்களின் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு திறன் உடைய மூலக்கூறுகளின் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் கண்காணிப்பை தொடர்ந்தனர். அப்போது, மனித உடலில் நோய் எதிர்ப்பு திறன் உடைய செல்கள், கொரோனாவை உருவாக்கும் வைரசின் (Crona Virus) திறனை செயலற்றதாக மாற்றுவது உறுதியானது. பிரிட்டன், தென் ஆப்ரிக்கா மற்றும் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசையும் எதிர்க்கும் திறன், அவர்களிடம் மேம்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்தியாவிலும், கோவேக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தற்போது மக்களுக்கு செலுத்தப்படுகிறது. ஆய்வுகளின் முடிவை வைத்துப் பார்க்கையில், தடுப்பூசி போடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது உறுதியாகி உள்ளது.

மேலும் படிக்க

கொரோனா வைரஸால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - பிரதமர் அறிவிப்பு

கொரோனா நோயாளிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் இலவச ஆலோசனை வழங்கும் மருத்துவர்கள்!

English Summary: Corona vaccine boosts immunity! Information in the study!
Published on: 02 June 2021, 11:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now