மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 3 January, 2022 8:16 AM IST
Vaccine for children

நாடு முழுவதும் 15-18 வயதுக்கு உட்பட்ட 10 கோடி சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி (Vaccine) செலுத்தும் பணி இன்று முதல் தொடங்குகிறது. சென்னையில், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். பள்ளிகளில் மட்டும் 26 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக அளவில் 33 லட்சத்து 20 ஆயிரம் சிறுவர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. இதில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 145 கோடிக்கும் அதிகமான டோஸ் போடப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கு தடுப்பூசி (Vaccine for children)

தற்போது, ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில், 15-18 வயது சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்குகிறது. இதற்கு தகுதி வாய்ந்த சிறுவர்கள் கோவின் ஆப் (Cowin App) மூலமாக ஆதார் அல்லது 10ம் வகுப்பு பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம்.

இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் ஆகிய 3 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், 15-18 வயது சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்த அனுமதி தரப்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி நாடு முழுவதும் 6.35 லட்சம் சிறுவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க

இரவு ஊரடங்கை விட முகக்கவசம், தடுப்பூசியே நம்மைப் பாதுகாக்கும்!

2022ல் கொரோனா முடிவுக்கு வரும்: WHO தலைவர் நம்பிக்கை!

English Summary: Corona vaccine for children across the country today!
Published on: 03 January 2022, 08:10 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now