அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 6 June, 2022 5:59 PM IST
Pregnant women

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தொடர்ந்து திமுக அரசின் மீது விமர்சனங்களை வைத்து வருகிறார். திமுக அரசில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது என்று குற்றம்சாட்டி வருகிறார். அந்த வகையில், அண்மையில், கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மாவில் முறைகேடு நடந்துள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் செய்தியாளர்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இன்று (ஜூ 5) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் தமிழக மருத்துவப் பணிகள் கழகம் ஒளிவு மறைவு இன்றி செயல்படுவதாக விளக்கம் அளித்தார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சற்று அதிகரித்து வருகிறது என்றார்.

வழக்கமான மரபணு பகுப்பாய்வுக்கு 139 மாதிரிகள் அனுப்பப்பட்டன என்றும் இதில் 8 பேருக்கு BA5 வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.4 பேருக்கு BA 4 வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இவை இரண்டுமே ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ்.

அடுத்த அலை வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் கூறி வருவதால் முன்னெச்சரிக்கையாக பொது இடங்களில் அனைவரும் முக கவசம் அணிந்து கொள்வது நல்லது.” என்று கூறினார்.

அண்ணாமலை குற்றச்சாட்டு குறித்து பேசிய டாக்டர் ராதாகிருஷ்ணன், “எனக்குத் தெரிந்தவரை தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் ஒளிவு மறைவு இன்றிதான் டெண்டர் விடுகிறது. அதே மாதிரி, இது போல பிரச்னைகள் இருக்கும்போது, குறிப்பிட்ட பொருட்களில் அது குழந்தைகளுக்கானதா பெண்களுக்கானதா என்று சரிபார்க்கிறோம். குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் உணவை மாற்றி ஒப்பிடக் கூடாது.” என்று கூறினார்.

மேலும் படிக்க

9ம் வகுப்பு வரை, மாணவர்கள் அனைவரும் பாஸ் என்பது தவறான தகவல் - தமிழ்நாடு அரசு

English Summary: Corruption in nutritional flour provided to pregnant women - Annamalai
Published on: 06 June 2022, 05:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now