News

Sunday, 05 June 2022 08:19 PM , by: R. Balakrishnan

Cotton Auction in Salem

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கிளை செயல்பட்டு வருகிறது. சனிக்கிழமை நேற்று (ஜூன் 4) நடைப்பெற்ற பருத்தி ஏலத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, மாவட்ட விவசாயிகள் மற்றும் சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்துகொண்டனர்.

பருத்தி ஏலம் (Cotton Auction)

பருத்தி ஏலத்தில் சுமார் 1550 பருத்தி மூட்டைகள் விவசாயிகளால் கொண்டவரப்பட்டு மொத்தம் 400 தொகுப்புகளாக வைத்து ஏலம் விடப்பட்டது. BT ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ரூபாய் 9369 முதல் அதிக பட்சமாக ரூபாய் 11440 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

DCH பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூபாய் 8800 ரூபாய் முதல் அதிகப்பட்சமாக 12109 ரூபாய் வரையிலும் விலை விற்று தீர்ந்து மொத்தம் 55 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடைப்பெற்றது.

அடுத்த ஏலம் ஜூன் 6ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

உர விற்பனை நிறுவனத்தின் காசோலை மோசடி: தோனி மீதும் வழக்குப் பதிவு!

உலகின் மிக நீளமான தாவரம்: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)