நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 August, 2022 2:42 PM IST
Cotton price raised

நாமக்கல்லில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 3850 பருத்தி மூட்டைகள் ஒரு கேடியே 40 லட்ச ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. நல்ல விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இவ்விலை தொடரவே வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தகவல்.

பருத்தி விலை உயர்வு (Cotton price Raised)

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாரம் தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் நாமக்கல், தா.பேட்டை, பவித்ரம், துறையூர், கொளக்குடி, முசிறி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் 3850 பருத்தி முட்டைகளை விற்பனை கொண்டு வந்திருந்தனர்.

இந்த ஏலத்தில் ஆர்.சி.எச் ரகம் குவிண்டாலுக்கு ரூ.9009 முதல் ரூ.11899 வரையிலும், சுரபி ரகம் குவிண்டாலுக்கு ரூ.10689 முதல் ரூ.12169 வரையிலும், கொட்டு ரகம் குவிண்டால் 3016 ரூபாய் முதல் 9917 ரூபாய் வரையிலும் ஏலத்திற்கு விடப்பட்டது.

ஏலத்தில் 3850 மூட்டைகள் ஒரு கோடியே 40 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த வார விலையை விட இந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு 2,000 ரூபாய் விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் கூறினர். கடந்த வாரம் ஆர்.சி.எச் ரகம் குவிண்டால் ரூ.9899 வரையிலும், சுரபி ரகம் குண்டால் ரூ.10599 வரை ஏலம் போனது. கடந்த ஜூன் மாதம் குவிண்டால் ரூ.13500 வரை விற்பனையான நிலையில் விலை வேகமாக குறைந்து மீண்டும் உயர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு விளைச்சல் குறைந்து போனாலும் நல்ல விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்த ஏலத்தில் சேலம், மகுடஞ்சாவடி, திருப்பூர், ராசிபுரம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்திகளை கொள்முதல் செய்தனர். மாசி பட்ட பருத்தி அறுவடை முடிவடையும் நிலையில் விலை தொடரவே வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க

திருப்பூரில் நெல் நடவுப் பணிகள் தீவிரம்: விவசாயிகள் ஆர்வம்!

இந்த ஊர்ல தான் பால் விலை குறைவு: தெரிந்து கொள்ளுங்கள்!

English Summary: Cotton price rise again: farmers happy!
Published on: 18 August 2022, 02:42 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now