News

Wednesday, 27 April 2022 02:54 PM , by: Dinesh Kumar

DCGI Approved Covaxin for Children 6-12 Years...

கொரோனா பீதியின் நான்காவது அலைக்கு மத்தியில், 6-12 வயதுடைய குழந்தைகளுக்கான பாரத் பயோடெக் கோவாக்சின் அவசரகால பயன்பாட்டிற்காக, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஏஜென்சி (DCGI) அனுமதித்துள்ளது.

தற்போது, 12 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு Covid-19 க்கு எதிராக Biological E's Corbevax தடுப்பூசி போடப்படுகிறது, மேலும் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவேக்ஸின் போடப்படுகிறது.

DCGI இதுவரை 12 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு அவசரகால கோவாக்ஸினை பயன்படுத்த ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 15-18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி, இந்த ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கியது, இதற்கான ஒப்புதல் டிசம்பர் 24, 2021 அன்று அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, இந்தியாவில் 12-14 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி மார்ச் 16 அன்று முதல் தொடங்கியது.

கடந்த வாரம், DCGI இன் பொருள் நிபுணர் குழு (SEC) ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட நிறுவனத்திடம் கோவிட்-19 தடுப்பூசியை 2-12 வயதுடைய குழந்தைகளுக்கு வழங்குவது குறித்த கூடுதல் தகவல்களைக் கேட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.

கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி சுகாதாரப் பணியாளர்களுக்கான முதற்கட்ட தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்பட்டு, நாடு தழுவிய அளவில் தடுப்பூசிப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 10 முதல், தனியார் தடுப்பூசி மையங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு Covid-19 தடுப்பூசியின் பூஸ்டர் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ் வழங்க அனுமதி கொடுக்கப்பட்டது.
இதுவரை 187 கோடிக்கும், அதிகமான Covid-19 தடுப்பூசி டோஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் 2.70 கோடிக்கும் அதிகமான இளம் பருவத்தினருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து 18 முதல் 59 வயதுடையவர்களுக்கு, இதுவரை 4.68 லட்சம் முன்னெச்சரிக்கை மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கடந்த 214 மணி நேரத்தில் 2,483 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், இந்தியாவில் Covid-19 நோய்த்தொற்றின் மொத்த எண்ணிக்கை 4,30,62,569 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 15,636 ஆகக் குறைந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையாகும்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின் படி, சோதனை செய்யப்பட்டவர்களின் தினசரி நேர்மறை விகிதம், தற்போது 0.55 சதவீதமாகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 0.58 சதவீதமாகவும் உள்ளது.

மேலும் படிக்க:

கொரோனா தடுப்பூசித் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! உலக சுகாதார அமைப்பு பாராட்டு!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 19-ம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)