மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 October, 2020 9:37 PM IST
Credit : Asianet Tamil

செல்போன் கதிர்வீச்சில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள ஏதுவாக மாட்டுச் சாண சிப் (Cow-Dung-Chip) ஒன்றை மத்திய அரசு உருவாக்கப்பட்டுள்ளது.

ராஷ்டிரிய காமதேனு ஆயோக் (Rashtriya Kamdhenu Aayog )

மத்தியில் ஆளும் பாஜக அரசின் மூத்த தலைவர்கள் பல்வேறு சமயங்களில் மாட்டுச் சாணம், கோமியம் குறித்து எடுத்துரைத்து வருகின்றனர். இந்நிலையில், ராஷ்டிரிய காமதேனு ஆயோக் (rashtriya kamdhenu aayog) என்ற அமைப்பை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார். இந்த அமைப்பு நாடு முழுவதும் காமதேனு தீபாவளி அபியான்’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

மாசற்ற தீபாவளியைக் கொண்டாடும் நோக்கில் இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மண் விளக்கு, மெழுகுவர்த்தி, விநாயகர் சிலை, லட்சுமி சிலை உள்ளிட்ட மாட்டுச் சாணத்தால் உருவாக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான தொடக்க விழாவில் பேசிய ராஷ்டிரிய காமதேனு ஆயோக் தலைவர் வல்லபாய் கதிரியா, மாட்டுச் சாணம் (Cow Dung) அனைவரையும் காக்கக் கூடியது. குறிப்பாக கதிர்வீச்சில் இருந்து நம்மை பாதுகாக்கிறது என்றார்.

இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், இதை அடிப்படையாகக் கொண்டு சிப் ஒன்றை தயாரித்துள்ளோம். இதனை மொபைல் போன்களில் பயன்படுத்தி கதிர்வீச்சு நம்மை தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது என்றும் கூறினார்.

மேலும் படிக்க...

மாட்டுச் சாணத்தில் இருந்து குளியல் சோப், டீ - வியப்பூட்டும் விபரங்கள்!

விவசாயிகளின் வாரிசுகளுக்கு சிறந்த வாய்ப்பு - மாதத்திற்கு 2 லட்சம் வரை ஊதியம்!

English Summary: Cow dung chip that protects from cell phone radiation
Published on: 13 October 2020, 09:24 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now