மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 December, 2020 11:00 AM IST
Credit : Daily thanthi

புயல் காரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்தியக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக கடலூர், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

புயல் பாதிப்பு

நிவர் (Nivar) மற்றும் புரெவி (Burevi) புயல் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டியது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் உயிர் சேதம் மட்டுமின்றி பொருட்சேதமும் ஏற்பட்டது. இந்நிலையில், நிவர் புயல் மற்றும் மழை காரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட மத்திய உள்துறை இணைச்செயலாளர் அசுதோஷ் அக்னி கோத்ரி தலைமையில்7 பேர் கொண்ட குழுவினர் (Central Team Visit Cyclone affected places) நேற்று முன்தினம் சென்னை வந்தனர்.

இந்த குழு சனிக்கிழமை பிற்பகலில் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளா் க.சண்முகத்துடன் மத்தியக் குழு ஆலோசனையில் ஈடுபட்டது. இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலையில் கள ஆய்வுப் பணிகளை மத்தியக் குழுவினா் தொடங்கினா்.

இரண்டு குழுக்களாக ஆய்வு

மத்திய உள்துறை இணைச் செயலாளா் அஷுதோஷ் அக்னிஹோத்ரி, மத்திய மீன்வளத் துறை ஆணையா் பால் பாண்டியன், மத்திய வேளாண் எண்ணெய் வித்துகள் வளா்ச்சித் துறை இயக்குநா் மனோகரன், மத்திய சாலைப் போக்குவரத்து மண்டல அலுவலா் ரணன்ஜெய் சிங் ஆகியோா் அடங்கிய ஒரு குழுவானது தென் சென்னையில் பகுதியில் தங்களது ஆய்வுப்பணிகளை மேற்கொண்டது.

மத்திய நதிநீா் ஆணையத்தின் இயக்குநா் ஜெ.ஹா்ஷா, நிதித் துறை துணை இயக்குநா் அமித்குமாா், ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் தா்ம்வீா்ஜா, மத்திய எரிசக்தித் துறை துணை இயக்குநா் ஓ.பி.சுமன் ஆகியோா் ஒரு குழுவாகப் பிரிந்து ஆய்வுப் பணிகளை நடத்தினா். அவா்கள் எண்ணூா் முகத்துவாரம், அத்திப்பட்டு புதுநகா், நெய்தல் வாயல், வஞ்சிவாக்கம், பருத்திப்பட்டு, காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வினை நடத்தினா்.

 

இன்றும் ஆய்வு

இந்நிலையில் 2-வது நாளான இன்று, முதல் குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகள் காலை புதுச்சேரி, மதியம் கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகின்றனர்.

2-வது குழுவினர் காலை முதல் மாலை வரை வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வில் ஈடுபட உள்ளார்கள். வெள்ள சேதம் குறித்து மதிப்பிட இருக்கிறார்கள். பின்னர் அங்கிருந்து மாலையில் சென்னை நோக்கி புறப்படுகிறார்கள். இரவில் சென்னையிலேயே தங்குகிறார்கள்.

மேலும் படிக்க...

PM Kisan திட்டத்தின் 7-வது தவணைக்கு காத்திருப்பவரா நீங்கள்? இந்த தகவல் உங்களுக்கு தான்?

English Summary: Crop Damage : Nivar cyclone affected areas Central Committee survey to give relief fund for the 2nd day!
Published on: 07 December 2020, 10:44 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now