மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 3 October, 2018 10:12 AM IST

 தமிழகத்தில் அதிக அளவில் தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கில் 1,500 ஹெக்டேர் பரப்பளவில் திராட்சை சாகுபடி நடைபெற்று வருகிறது. கம்பம் பள்ளத்தாக்கில் நிலவும் தட்ப வெப்ப நிலை, மண் மற்றும் நீரின் தன்மையால் நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், இங்கு ஆண்டுக்கு 3 முறை திராட்சை அறுவடை நடைபெறுகிறது. விவசாயிகள் சுழற்சி முறையில் அறுவடை பருவத்தை நிர்ணயித்து சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். கம்பம் பள்ளத்தாக்கில் உற்பத்தியாகும் திராட்சை திருச்சி, சென்னை, பெங்களூரு, கேரளம் ஆகிய பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் திராட்சை உற்பத்தி மற்றும் விற்பனையில் கடும் ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து வரும் விவசாயிகள், திராட்சை சாகுபடியை பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பணப்பயிர் சாகுபடியான திராட்சை விவசாயத்திற்கு அரசு சார்பில் போதிய மானியம் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படுவதில்லை. சொட்டு நீர் பாசன திட்டத்தை தவிர வேறு எந்தத் திட்டத்திலும் திராட்சை சாகுபடிக்கு அரசு சார்பில் மானியம் வழங்குவதில்லை. திராட்சை உற்பத்தியில் உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் முக்கிய செலவினமாக உள்ளது. ஆனால், திராட்சை பயிருக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் அரசு மானிய விலையில் உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் வழங்கப்படுவதில்லை. தனியார் மருந்துக் கடைகளில் அதிக விலை கொடுத்து உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளை வாங்கி பயன்படுத்த வேண்டியுள்ளது. 

தற்போது, அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்திலும் திராட்சை சாகுபடி சேர்க்கப்படவில்லை. இதனால் இயற்கை சீற்றம், பருவநிலை மாற்றம், நோய் தாக்குதலால் ஏற்படும் மகசூல் பாதிப்பிற்கு இழப்பீடு கிடைக்கும் என்ற குறைந்தபட்ச உத்தரவாதம் கூட இல்லை. எனவே திராட்சை விவசாயத்தை பாதுகாப்பதற்கு திராட்சை சாகுபடியை பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

English Summary: Crop Insurance request for Grapes
Published on: 03 October 2018, 02:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now