மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 January, 2021 7:20 PM IST
Credit : Dinamalar

பயிர் நிவாரணம் பெறும் விவசாயிகளின் பட்டியலை சரிபார்க்கும் பணிகளில், வேளாண் துறையினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். புயலால் பாதிப்படைந்த பயிர்களுக்கு நிவாரணம் அளிக்க, தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

நிவாரணம் 600 கோடி

டிசம்பரில் உருவான, 'நிவர் (Nivar) மற்றும் புரெவி (Burevi)' புயல்களால், தமிழகத்தில் பயிர்கள் பாதிக்கப்பட்டு, 5 லட்சம் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். இவர்களுக்கு நிவாரணம் வழங்க, அரசு, 600 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. நெல் (Paddy) உள்ளிட்ட பயிர்கள் பாதிப்புக்கு, 2.5 ஏக்கருக்கு, 20 ஆயிரம் ரூபாயும், நீண்ட காலப் பயிர் பாதிப்புக்கு 25 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்பட உள்ளது. மாவட்ட வாரியான பயிர் பாதிப்பு பட்டியல் (Crop Damage list), மாவட்ட ஆட்சியர்கள் வாயிலாக, சென்னையில் உள்ள வேளாண் துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

தனிக்குழு ஆய்வு:

பயிர் பாதிப்பு விபரங்களையும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் பட்டியலையும் தனிக் குழுவினர் (Seperate team) ஆய்வு செய்து வருகின்றனர். நிவாரணம் வழங்குவது குறித்து, பேரிடர் மேலாண்மை ஆணையர் பனீந்தர்ரெட்டி, வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, இயக்குனர் தட்சிணாமூர்த்தி, தோட்டக்கலைத் துறை இயக்குனர் சுப்பையன் (Subbaiyan) மற்றும் மாவட்ட கலெக்டர்கள், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று மாலை ஆலோசனை நடத்தினர்.வரும், 7ம் தேதி முதல், பயிர் நிவாரணம் வழங்கும் பணிகளை துவக்கி, ஒரு வாரத்திற்குள் முடிக்க, திட்டமிடப்பட்டுள்ளது.

பயிர் சேதத்திற்கான நிவாரணத்தை விரைவாக வழங்கினால், விவசாயிகள் நிம்மதி அடைவார்கள். அதோடு பயிர்க் காப்பீட்டு (Crop Insurance) தொகையும் கூடிய விரைவில் விவசாயிகளை சென்றடைந்தால் நல்லது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

நெல்கொள்முதல் நிலையங்களுக்கு பொறுப்பாளர்களாக விவசாயிகளை நியமிக்க வேண்டும்! விவசாயிகள் வலியுறுத்தல்!

விவசாயிகளிடம் கரும்பை நேரடியாக கொள்முதல் செய்யும் அரசு!

English Summary: Crop relief from the 7th! Crop Damage List Verification!
Published on: 05 January 2021, 07:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now